ஒரு மாதத்தில் 26 பேர் கைது என மன்னாரில் முறைப்பாடு

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 26 பேர் கடந்த ஆகஸ்ட் முதலாந் திகதி முதல் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக மன்னார் சுகவாழ்வு மன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த 26 பேரில் குடும்பஸ்தர்களும் இளைஞர்களும் அடங்குகின்றனர். இவர்கள் அனைவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர்களுடைய வீடுகளில் வைத்துக் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் இவர்களை கொழும்பில் இருந்து வருகை தந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினரே கைது செய்துள்ளதாகவும் கைதுசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மன்னார் சுகவாழ்வு மன்றத்திடம் முறையிட்டுள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக