பெஸ்லான் பணய சம்பவம் நினைவு தினம்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ரஷிய நகரான பெஸ்லானில் ஒரு பள்ளியின் மீது நடைபெற்ற ஒரு முற்றுகையில் 350 பேர் பலியான சம்பவத்தை அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்வில் நூற்றுக்கணக்கானவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.அந்த சம்பவத்தில் பலியானவர்களில் பாதியளவினர் சிறார்கள். அந்தப் பள்ளியை முற்றுகையிட்டிருந்த செச்சன்ய நாட்டைச் சேர்ந்தவர்கள், செச்சன்யாவிலிருந்து ரஷியத் துருப்பினர் விலக வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருந்தனர்.
மூன்று நாட்கள் இடம் பெற்ற இந்த முற்றுகை, சர்ச்சைக்குரிய வகையில் ரஷியர்கள் அந்தக் கட்டிடத்துக்குள் அதிரடியாக நுழைந்ததையடுத்து முடிவுக்கு வந்தது.
இந்தச் சம்பவம் நடைபெற்று ஐந்து ஆண்டுகள் ஆனாலும் அதன் நினைவுகள் அங்குள்ள மக்களை இன்றளவும் பாதித்துள்ளதாக அங்கிருக்கும் பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
இந்தச் சம்பவங்கள் குறித்து ஒரு தீவிரமாக ஒரு விசாரணை நடைபெறாதது குறித்து பலர் விமர்சனம் செய்துள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக