JKR. Blogger இயக்குவது.

கொழும்பு மாவட்ட வேட்பாளர் தெரிவில் ஐதேகவிற்கும் தமது கட்சிக்கும் இடையில் முரண்பாடா? : மனோ கணேசன் எம்.பி. விளக்கம்


ஜனநாயக மக்கள் முன்னணிக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் கொழும்பு மாவட்ட பொதுத்தோ்தல் வேட்பாளர் நியமனங்களை பங்கிட்டுக்கொள்வதில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி தெரியவருவதாவது:

ஜனநாயக மக்கள் முன்னணிக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் கொழும்பு மாவட்ட நியமனங்களை பங்கிட்டுக்கொள்வதில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ஜெனரல் சரத் பொன்சேகாவின் இல்லத்திலே நேற்று இரவு ரணில், பொன்சேகா, மனோ, கரு ஜயசூரிய, ரவி கருணாநாயக்க ஆகியோர் கலந்துகொண்ட பேச்சுவார்த்தைகளின் இடையில் மனோ கணேசன், ரவூப் ஹக்கிம் ஆகியோரது கட்சிகளுக்கு தலா ஒவ்வொரு ஆசனம் மாத்திரமே கொழும்பு மாவட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்து தெரிவித்த போது அதை கோபத்துடன் இடைமறித்த மனோ கணேசன் தாம் இங்கு வந்தது ஆசனங்களை பற்றி பேசுவதற்காக இல்லை என்றும், தமது கட்சியின் பங்களிப்பு இருந்திருக்காவிட்டால் கொழும்பு மாநகரத்தின் ஐந்து தொகுதிகளிலும் ஜனாதிபதி தேர்தலில் நமது கூட்டணி வெற்றி பெற்றிருக்க முடியாதென்றும் கூறிவிட்டு கூட்டத்திலிருந்து இடை நடுவில் வெளியேறியதாக பிரபல ஈ-நியூஸ் சிங்கள-ஆங்கில இணையத்தளம் நேற்று வெளியிட்டுள்ள பரபரப்பு செய்தி தொடர்பில் ஜமமு தலைவர் மனோ கணேசனை தொடர்பு கொண்டு கேட்டப்பொழுதில் அவர் கூறியதாவது,

இச்செய்தி உண்மையானது தான். சரத் பொன்சேகாவை தொடர்ந்தும் எமது கூட்டணியில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவரது இல்லத்திற்கு சென்று நாம் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது, கொழும்பு மாவட்டத்தில் எமது கட்சி சார்பாக கூட்டணியிலே போட்டியிடும் வேட்பாளர் தொகை பற்றிய கருத்து பேசப்பட்டமை துரதிஷ்டவசமானதாகும்.

இதை பேசுவதற்காக நாம் அங்கு போகவில்லை. இன்று காலை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரின் அழைப்பின் பேரில் நான் அவரை சந்தித்தபொழுது, ஜேவிபியின் வேட்பாளர்களை கூட்டணி வேட்பாளர் பட்டியலிலே உள்வாங்குவதற்கு உள்ள இயலாமையையே தாம் அவ்விதம் குறிப்பட்டதாகவும், எமது கட்சியின் வேட்பாளர் தொகை பற்றி கருத்துக் கூறவில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க அவர்கள் என்னிடம் விளக்கி கூறினார்.

எனவே இத்துடன் இவ்விவகாரம் தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளது. எனினும் சிலமணி நேரங்களுக்கு முன்னாலே நடைபெற்ற இந்த கடைசி கலந்துரையாடலின் போது ஐதேக தலைவரிடம் நான் தெரிவித்த கருத்துகளை ஊடகங்களின் மூலமாக தமிழ் மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமையென எண்ணுகின்றேன்.

எமது கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி கடந்த மூன்று வருடங்களில் துரித வளர்ச்சியை கண்டுவிட்ட ஒர் தேசிய தமிழ் கட்சியாகும். எமது இன்றைய வளர்ச்சி கட்டத்தை ஐதேக புரிந்துகொண்டு எமக்குரிய அந்தஸ்தை வழங்கவேண்டும். எதிர்வரும் தேர்தலில் நாம் நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

எனவே நாம் இன்று ஓர் கொழும்பு கட்சி அல்ல. ஆனால் கொழும்பு மாவட்டத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவருக்கும் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம். தலைநகர தமிழ் மக்கள் எனக்கு தொடர்ந்து வாக்களித்து, எமது கட்சிக்கு தந்துவரும் உற்சாகத்தினால்தான் இன்று நாம் நாடு முழுக்க தேசிய ரீதியாக செயற்பட முடிகின்றது.

எனவே என்னை வாழ வைக்கும் தலைநகர தமிழ் மக்களை நான் ஒருபோதும் மறந்துவிடமாட்டேன். கொழும்பிலே வாழும் இந்திய வம்சாவளி மற்றும் வடகிழக்கு சார்ந்த அனைத்து தமிழ் மக்களுக்கும் தமிழர்கள் என்ற இன அடிப்படையில் எமது கட்சியுடன் உணர்வு பூர்வமாக அணிதிரண்டு உள்ளார்கள் என்பதை பெரும்பான்மை கட்சிகள் புரிந்துகொள்ளவேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சியின் சுமார் 25 உறுப்பினர்கள் தமது கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு, ஆளுங்கட்சியுடன் இணைந்து அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளார்கள். ஐதேகவுடன் கூட்டணி சேர்ந்து வெற்றி பெற்று பாராளுமன்றம் வந்த மலையக கட்சிகளும் இன்று அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் நாம் உறுதியுடன் பல்வேறு சவால்களை சந்தித்தப்படி ஐதேக கூட்டணியில் தொடர்ந்தும் இருந்து கொண்டிருக்கின்றோம். இதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். எனவே ஐக்கிய தேசிய கட்சி எமக்கு கடமைப்பட்டிருக்கின்றது. அரசியல் சவால்கள் என்ற ஆற்றை கடக்கும் வரைக்கும் அண்ணன், தம்பி எனக்கூறிவிட்டு ஆற்றைக் கடந்தபின் அதாவது பாராளுமன்ற தேர்தலின்போது நீ யாரோ நான் யாரோ என ஐதேக கூறுமானால் நாம் அதை பொறுத்துக்கொள்ள மாட்டோம்.

கொழும்பு மாவட்டத்திலேயுள்ள ஒரு சில ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கு தமிழ் மக்களின் விருப்பு வாக்குகளின் மீது பேராசை இருக்கின்றது. எமக்கு இரண்டு இடங்களை கொடுத்துவிட்டு தமிழர்களின் மூன்றாவது விருப்பு வாக்கை கவர்ந்துகொள்வது இவர்களது முதல் திட்டம். அது சரிவராவிட்டால் தமிழ் வாக்காளர்களின் மூன்று விருப்பு வாக்குகளுக்கு எதிராக நான்கு அல்லது ஐந்து தமிழ் வேட்பாளர்களை நிறுத்தி எமது மக்களின் விருப்பு வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என்பது இவர்களது இரண்டாவது திட்டம்.

அதாவது தமிழ் மக்களின் கட்சி வாக்குகள் யானை சின்னத்திற்கு வந்து குவியவேண்டும். ஆனால் தமிழர்களின் விருப்பு வாக்குகள் சிதறடிக்கப்பட்டு உரிய தமிழ் பிரதிநிதித்துவம் கிடைக்கக்கூடாது என்ற இந்த கபடத்தனமான இனவாத ஐதேக அரசியல்வாதிகளை பற்றி எமக்கு தெரியும். இவர்களுக்கு தமது சுயநல நோக்கங்களுக்காக துணைபோகும் சில தமிழர்களையும் எங்களுக்குத் தெரியும். இவர்களை இனிமேலாவது திருந்துங்கள் என நாம் கூறுகின்றோம்.

பல்லாயிரக்கணக்கான தமிழ் விருப்பு வாக்குகள் பெரும்பான்மை வேட்பாளர்களுக்கு கிடைக்கவேண்டும். ஆனால் ஒர் நூறு சிங்கள வாக்குகளைகூட இவர்களால் எங்களுக்கு பெற்றுத்தர முடியாது. இந்த ஒரு வழிப்பாதை மோசடி அரசியலுக்கு நாம் இடங்கொடுக்க மாட்டோம்.

கொழும்பு மாவட்டத்தில் மூன்று தமிழ் எம்பிக்களை நாம் உருவாக்குவோம். ஏனென்றால் தமிழர்களுக்கு துன்பம் வந்தால் அது எனக்குத்தான் வலிக்கின்றது. எனக்கு துணையிருப்பதற்கு இன்னும் இரண்டு எம்பிக்களை நாம் பெறவேண்டும். இது இனவாதம் இல்லை. இது எங்களது உரிமை. அடுத்தவர்களின் உரிமைகளை நாம் ஒருபோதும் அபகரிக்க மாட்டோம்.

அதேவேளையில் எங்களது உரிமைகளின் ஓர் அங்குலத்தையேனும் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். எனவே ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உரிய முறையில் பெற்றுக்கொள்வதற்கு உரிய சந்தர்ப்பங்கள் எங்களுக்கு கிடைக்கவேண்டும்.

எங்களது தன்மானத்தை விட்டு விட்டு வேட்பாளர் ஆசனங்களுக்காக எவரிடமும் நாங்கள் மன்றாடுவோம் என்று கிஞ்சித்தும் கருதவேண்டாம் என நான் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியுள்ளேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.
Ler Mais

மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கம்


மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மீனவர்கள் தொழிலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த நடைமுறை மற்றும் ஏனனய கெடுபிடிகள் நேற்றுடன் நீக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண முகாமைதுவ அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அதாவது மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கி வந்த பிரச்சினை தொடர்பாக தான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும், இதன் பேரில் ஜனாதிபதி மன்னார் மாவட்ட கடற்தளபதிகளுடன் உரையாடியதோடு மன்னார் மாவட்ட மீனவர்கள் 24 மணி நேரமும் தொழிலுக்கு செல்ல முடியும் என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்தவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக 6 ஆம் திகதி ஏற்பாடு செய்யபட்டிருந்த கூட்டத்திலேயே அமைச்சர் றிசாட் பதியுதீன் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சர் அவர்கள் நேற்றிரவு தலைமன்னாரில் உள்ள முகாமுக்கு சென்று அங்குள்ள கடற்தளபதிகளுடன் மீனவர்கள் 24 மணிதியால வேலை செய்வது தொடர்பாக கலந்துரையாடியும் உள்ளார்.
Ler Mais

இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க நியமனம்


பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இராணுவப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாளை திங்கட்கிழமை முதல் இராணுவப் பேச்சாளருக்கான கட மையை அவர் பொறுப்பேற்கவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இராணுவப் பேச்சாளராக இருந்த பிரிகேடியர் உதய நாணயக்கார இராணுவத்தின் பிரதம களப்பொறியியலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் நாளை திங்கட்கிழமை முதல் அவரும் கடமையை பொறுப்பேற்கவுள்ளார்.

முன்னர் இராணுவப் பேச்சாளராக இருந்த பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் இராணுவ ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே பிரிகேடியர் உதய நாணயக்கார இராணுவப் பேச்சாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

லண்டனிலிருந்து இலங்கை வந்துள்ள பிரிகேடியர் பிரசாத் சமர சிங்க இராணுவத்தின் பிரதான தொலைத் தொடர்பு அதிகாரியாகவும் சமி க்ஞை அதிகாரியாகவும் நியமனம் பெற்றிருந்தார்.தற்போது அவர் வகிக்கும் பதவிக்கு மேலதிகமாக இராணுவப் பேச்சாளர் நியமனமும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Ler Mais

ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது: கோவை மாநாட்டில் மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு


ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு கோவையில் நடைபெறும் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார்.
கோவையில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு கோவை வ.உ.சி.பூங்கா மைதானத்தில் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.

இதில் கலந்து கொண்ட டாக்டர் பி.ராமசாமி மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகையில்,

இலங்கைத் தமிழர்களின் துயர நிலையை மத்திய அரசிடம் எடுத்துக் கூறி நிவாரணம் பெற்றுத் தர தமிழக அரசு தவறி விட்டது. எனவே கோவை உலக செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

'உலகம் எங்கும் பரந்து கிடக்கும் தமிழர்களுக்கு கடந்த காலங்களில் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டது. உலக அளவில் உள்ள தமிழர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழின பாதுகாப்புக்காக உலக அளவில் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அதற்கான முதல்படிதான் இந்த மாநாடு.

தமிழ் இனத்தின் ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் தனிநாடு என்னும் தாகம் இன்னும் தணியவில்லை. தமிழர்களுக்கு என தனிநாடு ஒன்று வேண்டும். அது தனி ஈழமாக அமையும்.

ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். தமிழர்களுக்கு தனித்துவம் வாய்ந்த தலைவர்கள் தேவை என்றார்.

நிகழ்ச்சியில் புலவர் புலமைப்பித்தன், மலேசிய நாட்டு எம்.பி குணசேகரன், மலேசிய எம்.எல்.ஏ.க்கள் சிவநேசன், குணா, ரவி, சிம்மாதிரி, கணபதிராவ், வசந்தகுமார், தொழில் அதிபர் அருணாச்சலம், தமிழ் அறிஞர் பொன்னுரங்கம் உள்பட பலர் பேசினர்.

மாநாடு இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

தமிழக அரசு தவறி விட்டது - ராமசாமி

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பி.ராமசாமி கூறுகையில், இலங்கைத் தமிழர்களின் நிலையை மத்திய அரசிடம் எடுத்துக் கூறி அவர்களின் உயிரைக் காக்கவோ, துயரத்தைத் துடைக்கவோ தமிழக அரசு போதிய நடவடிக்கையை எடுக்கவில்லை.

இலங்கைத் தமிழர்களின் நலன்களைக் காக்க தமிழக அரசு தவறி விட்டது.

கடந்த ஆண்டு நடந்த வெளிநாட்டு இந்தியர் மாநாட்டின்போது பாலஸ்தீனியர்கள் குறித்து பெரிதும் கவலைப்பட்டுப் பேசினார் பிரதமர் மன்மோகன் சிங். ஆனால் ஈழத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து அவர் ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை.

தற்போதைய தேவை உலக அரங்கில் தமிழர்களின் குரல் உரத்து ஒலிக்க ஒரு வலிமையான அமைப்புதான். மலேசியா, சிங்கப்பூர், கனடா, மொரீஷியஸ் மற்றும் உலகின் பல பகுதிகளிலும் தமிழர்கள் பெருமளவில் உள்ளனர். இவர்கள் ஒருங்கிணைந்து உரத்துக் குரல் எழுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது என்றார் ராமசாமி.

ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த வெளிநாட்டு இந்தியர் மாநாட்டையும் ராமசாமி புறக்கணித்தார் என்பது நினைவிருக்கலாம். ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்காத, தட்டிக் கேட்காத இந்திய அரசின் செயலைக் கண்டித்து மாநாட்டைப் புறக்கணிப்பதாக அப்போது அவர் கூறியிருந்தார்.
Ler Mais

செய்தியறிக்கை


சீனாவில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு
சீனாவில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு

சீனாவுக்கு பலகோடி மதிப்பிலான நிலக்கரி ஆஸ்திரேலியாவில் இருந்து ஏற்றுமதி

சீனாவுக்கு பலகோடி டன் நிலக்கரியை விற்பனை செய்யும் உடன்படிக்கையில் தாம் கைச்சாத்திட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் சுரங்கத் தொழில் அதிபர் கிளைவ் பால்மர் தெரிவித்துள்ளனர்.

ரிசோர்சஸ் ஹவுஸ் என்ற தனது நிறுவனம் சுமார் 60 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை வென்றுள்ளதாகவும், ஆண்டொன்றுக்கு சுமார் 40 மில்லியன் டன் நிலக்கரியை தாங்கள் விற்பனை செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஏற்றுமதி திட்டத்தை செயற்படுத்த ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் பகுதியில் மிகப்பெரிய சுரங்கத்தொழில் மையம் ஒன்று அமைக்கப்படும் என்றும், நிலக்கரியை ஏற்றுமதி செய்ய 500 கிலோமீட்டர் ரயில் பாதை அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் துரிதமான பொருளாதார வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயற்கை வளங்களை பெற சீனா முயற்சித்து வருகிறது.


இரான் கூற்று குறித்து மேற்கத்தைய நாடுகள் அவநம்பிக்கை

இரான் அணுவசதி ஒன்று
இரான் அணுவசதி ஒன்று

இரானிய அணுசக்தி திட்டம் பற்றி அனைத்துலக நாடுகளுடன் உடன்படிக்கை ஒன்றை எட்ட தாம் நெருங்கி கொண்டிருப்பதாக இரான் விடுத்துள்ள அறிக்கை பற்றி அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளும் நம்பிக்கையின்மையை வெளியிட்டுள்ளன.

அணு ஆயுதம் ஒன்றை தயாரிப்பதில் முன்னேற்றம் கண்டு வரும் இரான் அதனை முற்றாக நிறுத்திவிடும் அறிகுறிகள் எதுவும் தமக்கு தென்படவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

நிலைமையை தனக்கு சாதகமாக்க இரான் காலம் தாழ்த்தி வருகிறது என்று பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் பாப் அயின்ஸ்வொர்த் குறிப்பிட்டுள்ளார்.



இந்திய காஷ்மீரில் ஆர்ப்பாட்டம்

காஷ்மீர்
காஷ்மீர்

இந்தியா நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சிறுவனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்னர் இந்த ஆர்ப்பாட்டம் வீதிகளில் இடம்பெற்றுள்ளது.

கடந்த வாரம் இதே போன்று மற்றுமொரு சிறுவன் இறந்த பின்பு பிறப்பிக்கப்பட்ட தடைகளை ஆர்ப்பாட்டகாரர்கள் மீறி இருந்தனர்.

சுதந்திரம் வேண்டும் என்று கூறி வரும் குழுக்கள் விடுத்த கடையடைப்பு ஐந்தாவது நாளாக இடம்பெற்று வருவதாகவும், இந்த பகுதியில் பதட்டம் உச்சமாக இருப்பதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.


அமெரிக்காவின் கிழக்கில் கடும் பனிப்பொழிவு

'வெள்ளை' மாளிகை
'வெள்ளை' மாளிகை

அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளில் இது மிக கடுமையான பனிப்பொழிவாக பார்க்கப்படுகிறது.

வாஷிங்டன் மற்றும் பால்ட்டிமோர் பகுதிகளில் சூறாவளி காற்றால் பனி எங்கும் கொட்டியுள்ளது, இதனால் மரங்கள் கார்கள் மற்றும் கட்டிடங்கள் மீது விழுந்து போக்குவரத்து பாதித்துள்ளது.

முக்கிய விமானநிலையங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் செல்ல வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியரங்கம்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்

ரஷ்யாவில் இலங்கை ஜனாதிபதி

ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் சென்றுள்ளார். இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டு இருக்கும் இலங்கை ஜனாதிபதி, ரஷ்ய அதிபரை சந்தித்து ரஷ்யாவிடம் ஆயுதங்களை வாங்குவதற்கும், சீர் செய்வதற்கான கடன் உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையொப்பமிடவுள்ளார்.

ரஷ்யாவை உண்மையான உற்ற நண்பனாக இலங்கை பார்க்கிறது. ஐ.நா பாதுகாப்பு சபையின் மற்றுமொரு நிரந்தர உறுப்பினரான சீனாவுடன் இணைந்து இலங்கை அரசின் மீது போர் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவாதம் வருவதை ரஷ்யா தடுத்து இருந்தது.

பல மாத காலமாகவே, ரஷ்யாவுக்கு நன்றி கூறி இலங்கையில் இருக்கின்ற ரஷ்ய தூதரகத்துக்கு முன்பாக பதாதை ஒன்று தொங்கி வருகிறது.

இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தின் போது, சுமார் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் இலங்கைக்கு கொடுப்பது தொடர்பான ஒப்பந்தம் கையொப்பமாகும் என்றும், இந்த கடன் ரஷ்ய ஆயுதங்களை வாங்குவதற்கும், சிவில் மற்றும் இராணுவ உபயோகம் கொண்ட பொருட்களை வாங்குவதற்காகவும் கொடுக்கப்படுகிறது என ரஷ்யாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த கடன் ஏற்கனவே இலங்கையிடம் இருக்கும் ரஷ்ய ஆயுதங்களை சீர் செய்யவும் பயன்படும் என்று இலங்கையில் இருக்கின்ற விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆயுதம் மட்டுமன்றி தேயிலை வியாபாரத்திலும் இருநாடுகளுக்கும் இடையில் உறவு நிலவி வருகிறது. இலங்கை தேயிலையை அதிகமாக வாங்கும் நாடுகளில் ஒன்றாக ரஷ்யா இருக்கிறது.

இந்நிலையில் நீண்டகாலமாக இருந்து வரும் அவசரகால சட்டத்தை இலங்கை நாடாளுமன்றம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. நபர்களை பிடித்து வைத்திருப்பதற்கு இந்த அவசரகால சட்டம் பெரும் அதிகாரத்தை கொடுக்கிறது. விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாகாமல் இருக்க இந்த சட்ட நீட்டிப்பு அவசியம் என இலங்கை பிரதமர் கூறினார்.

இந்த சட்டம் மூலம், தேர்தலுக்கு பின்னர் ஜனாதிபதியை கொல்ல முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் எதிர்கட்சி ஆதரவாளர்களையும் அரசு பிடித்து வைத்துள்ளது. ஆனால் அரசின் குற்றச்சாட்டை எதிர்கட்சியினர் நிராகரித்துள்ளனர்.


அவசர நிலை சட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பதை பெப்ரல் விமர்சித்துள்ளது

இலங்கையில் அவசரகால சட்டம்
இலங்கையில் அவசரகால சட்டம்

இலங்கை நாடாளுமன்றத்தால் அவசர நிலை நீடிக்கப்பட்டுள்ளதை பெப்ரல் எனப்படும் நியாயமான நேர்மையான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு விமர்சித்துள்ளது.

இது பற்றி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட பெப்ரல் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ரோஹன ஹோடியராச்சி,"இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. ஜனாதிபதித் தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது. குறுகிய காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலும் நடக்கப் போகிறது எனவே இப்போது இது போன்ற அவசர கால நிலையை நீடிக்க தேவையில்லை" என்றார்.

அதே நேரம் அவசர கால நிலை காரணமாக தேர்தல் நடைமுறைகளுக்கு நேரடி பாதிப்பு இல்லை என்றும், ஆனாலும் சில நேரங்களில் அரசியல் நோக்கங்களுக்காக இதை துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார். .

அவசர நிலை சட்டம் துஷ்பிரோயகம் செய்யப்பட்டதாக தமக்கு இதுவரை நேரடிப்புகார்கள் வரவில்லை என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்


இந்தியாவில் உணவுப்பொருட்களின் விலை கட்டுக்குள் வரும் - இந்திய பிரதமர்

உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு
உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு

இந்தியாவில் பெருமளவு அதிகரித்துவிட்ட உணவுப்பொருள்களின் விலை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்று, விலைவாசி உயர்வுப் பிரச்சினை தொடர்பாக மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசும்போது அவர் இதைத் தெரிவித்தார். கடந்த ஓராண்டில் உணவுப் பொருள்களின் விலை 18 சதம் அளவுக்கு அதிகரித்திருப்பது குறித்து அவர் கவலை வெளியிட்டார். உருளைக் கிழக்கு உள்ளிட்ட சில அத்திவாசியப் பொருட்களின் விலை இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துவிட்டதால் பொதுமக்கள் மீது அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

இறக்குமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலமும், மானியத் திட்டங்களை நீடிப்பதன் மூலமும், மக்களின் கோபத்தைத் தணிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

ஆனால், இன்று முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், தறபோது இறங்குமுகத்தில் இருக்கும் விலைவாசி உயர்வு மேலும் குறையும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகத்தின் துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விலை உயர்வைக் கட்டுப்படுத்த பல்வேறு யோசனைகளை முன்வைத்ததாகத் தெரிவித்தார்.

அதன்பிறகு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசினார்.

Ler Mais

இலங்கைக்கு ஆயுதக் கொள்வனவுக்கு 300 மில்லியன் அமெ.டொலர்கள் ரஷ்யா கடனுதவி

இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார்.
விஜயத்தை மேற்கொண்டு இருக்கும் இலங்கை ஜனாதிபதி, ரஷ்ய அதிபரை சந்தித்து ரஷ்யாவிடம் ஆயுதங்களை வாங்குவதற்கும், சீர் செய்வதற்கான கடன் உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையொப்பமிடவுள்ளார்.

ரஷ்யாவை உண்மையான உற்ற நண்பனாக இலங்கை பார்க்கிறது. ஐ.நா பாதுகாப்பு சபையின் மற்றுமொரு நிரந்தர உறுப்பினரான சீனாவுடன் இணைந்து இலங்கை அரசின் மீது போர் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவாதம் வருவதை ரஷ்யா தடுத்து இருந்தது.

பல மாத காலமாகவே, ரஷ்யாவுக்கு நன்றி கூறி இலங்கையில் இருக்கின்ற ரஷ்ய தூதரகத்துக்கு முன்பாக பதாதை ஒன்று தொங்கி வருகிறது.

இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தின் போது, சுமார் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் இலங்கைக்கு கொடுப்பது தொடர்பான ஒப்பந்தம் கையொப்பமாகும் என்றும், இந்த கடன் ரஷ்ய ஆயுதங்களை வாங்குவதற்கும், சிவில் மற்றும் இராணுவ உபயோகம் கொண்ட பொருட்களை வாங்குவதற்காகவும் கொடுக்கப்படுகிறது என ரஷ்யாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த கடன் ஏற்கனவே இலங்கையிடம் இருக்கும் ரஷ்ய ஆயுதங்களை சீர் செய்யவும் பயன்படும் என்று இலங்கையில் இருக்கின்ற விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆயுதம் மட்டுமன்றி தேயிலை வியாபாரத்திலும் இருநாடுகளுக்கும் இடையில் உறவு நிலவி வருகிறது. இலங்கை தேயிலையை அதிகமாக வாங்கும் நாடுகளில் ஒன்றாக ரஷ்யா இருக்கிறது.
Ler Mais

இலங்கைக்கு ஆயுதக் கொள்வனவுக்கு 300 மில்லியன் அமெ.டொலர்கள் ரஷ்யா கடனுதவி

இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார்.
விஜயத்தை மேற்கொண்டு இருக்கும் இலங்கை ஜனாதிபதி, ரஷ்ய அதிபரை சந்தித்து ரஷ்யாவிடம் ஆயுதங்களை வாங்குவதற்கும், சீர் செய்வதற்கான கடன் உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையொப்பமிடவுள்ளார்.

ரஷ்யாவை உண்மையான உற்ற நண்பனாக இலங்கை பார்க்கிறது. ஐ.நா பாதுகாப்பு சபையின் மற்றுமொரு நிரந்தர உறுப்பினரான சீனாவுடன் இணைந்து இலங்கை அரசின் மீது போர் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவாதம் வருவதை ரஷ்யா தடுத்து இருந்தது.

பல மாத காலமாகவே, ரஷ்யாவுக்கு நன்றி கூறி இலங்கையில் இருக்கின்ற ரஷ்ய தூதரகத்துக்கு முன்பாக பதாதை ஒன்று தொங்கி வருகிறது.

இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தின் போது, சுமார் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் இலங்கைக்கு கொடுப்பது தொடர்பான ஒப்பந்தம் கையொப்பமாகும் என்றும், இந்த கடன் ரஷ்ய ஆயுதங்களை வாங்குவதற்கும், சிவில் மற்றும் இராணுவ உபயோகம் கொண்ட பொருட்களை வாங்குவதற்காகவும் கொடுக்கப்படுகிறது என ரஷ்யாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த கடன் ஏற்கனவே இலங்கையிடம் இருக்கும் ரஷ்ய ஆயுதங்களை சீர் செய்யவும் பயன்படும் என்று இலங்கையில் இருக்கின்ற விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆயுதம் மட்டுமன்றி தேயிலை வியாபாரத்திலும் இருநாடுகளுக்கும் இடையில் உறவு நிலவி வருகிறது. இலங்கை தேயிலையை அதிகமாக வாங்கும் நாடுகளில் ஒன்றாக ரஷ்யா இருக்கிறது.
Ler Mais

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டம்?


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீர, வீராங்கனைகளை இம்முறை தேர்தலில் களமிறக்க ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாகாணசபைத் தேர்தல்களின் போது பிரபல்யமானவர்கள் அதிகளவில் வெற்றியை ஈட்டியமை குறிப்பிடத்தக்கது.

நாமல் ராஜபக்ஷ தெற்கில் போட்டியிட உள்ளதாகவும், பிரதமரின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க களுத்துறை மாவட்டத்திலும் தேர்தலில் களமிறங்கவுள்ளனர்.

மேலும், சர்வதேச கீர்த்தியைப் பெற்றுக் கொண்ட பிரபல கிரிக்கட் நட்சத்திரம் ஒன்றை மாத்தறை மாவட்டத்தின் சார்பில் களமிறக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இவர்களைவத் தவிர பல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிக, நடிகையர் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
Ler Mais

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டம்?


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீர, வீராங்கனைகளை இம்முறை தேர்தலில் களமிறக்க ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாகாணசபைத் தேர்தல்களின் போது பிரபல்யமானவர்கள் அதிகளவில் வெற்றியை ஈட்டியமை குறிப்பிடத்தக்கது.

நாமல் ராஜபக்ஷ தெற்கில் போட்டியிட உள்ளதாகவும், பிரதமரின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க களுத்துறை மாவட்டத்திலும் தேர்தலில் களமிறங்கவுள்ளனர்.

மேலும், சர்வதேச கீர்த்தியைப் பெற்றுக் கொண்ட பிரபல கிரிக்கட் நட்சத்திரம் ஒன்றை மாத்தறை மாவட்டத்தின் சார்பில் களமிறக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இவர்களைவத் தவிர பல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிக, நடிகையர் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
Ler Mais

ஹெய்ட்டியில் ஹெலிகொப்டர் விபத்து : இரு அமெரிக்கர் பலி


ஹெய்ட்டியில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட அமெரிக்க ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் மரணமடைந்தனர்.

ஹெய்ட்டி நாட்டின் எல்லை அருகே, டொமினிக்கன் குடியரசு பகுதியில் ரெஸ்டாரேசியன் என்ற இடத்தில் இந்த ஹெலிகொப்டர் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் ஹெலிகொப்டர் நொறுங்கி தீப்பிடித்தது. ஹெலிகொப்டரில் பயணம் செய்த அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹலோவெக், ஜான்வார்டன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஹெய்ட்டியின் தலைநகர் போர்ட்-ஆப்- பிரின்ஸ் நகரில் இருந்து டொமினின்கன் குடியரசில் உள்ள சான்டியாகோ திரும்பும்போதே மேற்படி விபத்து சம்பவித்துள்ளது.

விபத்துக்கான காரணம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Ler Mais

ஹெய்ட்டியில் ஹெலிகொப்டர் விபத்து : இரு அமெரிக்கர் பலி


ஹெய்ட்டியில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட அமெரிக்க ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் மரணமடைந்தனர்.

ஹெய்ட்டி நாட்டின் எல்லை அருகே, டொமினிக்கன் குடியரசு பகுதியில் ரெஸ்டாரேசியன் என்ற இடத்தில் இந்த ஹெலிகொப்டர் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் ஹெலிகொப்டர் நொறுங்கி தீப்பிடித்தது. ஹெலிகொப்டரில் பயணம் செய்த அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹலோவெக், ஜான்வார்டன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஹெய்ட்டியின் தலைநகர் போர்ட்-ஆப்- பிரின்ஸ் நகரில் இருந்து டொமினின்கன் குடியரசில் உள்ள சான்டியாகோ திரும்பும்போதே மேற்படி விபத்து சம்பவித்துள்ளது.

விபத்துக்கான காரணம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Ler Mais

ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை நிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்


இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகையை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. ஐ.நா.வின் மூன்று சாசனங்களை மீறியதன் காரணமாகவே இலங்கைக்கு எதிராக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சம்பிரதாயபூர்வமான நடவடிக்கைகளை இம்மாத இறுதியில் மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணக்கம் கண்டுள்ள போதிலும் மேற்படி தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இன்னும் 6 மாத காலம் எடுக்கும் என்று ஒன்றியத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜிஎஸ்பி சலுகையைth தக்க வைத்துக் கொள்வதற்கு அல்லது அதனை மீளப் பெறுவதற்கு ஏதுவான நடவடிக்கைகன இலங்கை மேற்கொள்ளவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று ராஜதந்திரி ஒருவர் சர்வதேச செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவாக்கப்பட்ட சலுகைத் திட்டத்தின் (ஜீ.எஸ்.பி.) கீழ் 16 வறிய நாடுகள் வர்த்தக சலுகைகளை பெற்றுக் கொண்டுள்ளன. இச்சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கு சமூக மற்றும் மனித உரிமை பேணல் போன்ற விடயங்களில் கடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

இலங்கைக்கு வர்த்தக சலுகைகளை நிறுத்துவதற்காக கடந்த வாரம் எடுக்கப்பட்ட இத்தீர்மானத்தை, பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி ஒன்றுகூடும் ஐரோப்பிய நிதியமைச்சர்கள் அங்கீகரிக்கவுள்ளனர்.

உற்பத்தியாளர்களும் வர்த்தகர்களும் புதிய விதிகளுக்கேற்ப சீராக்கல்களை மேற்கொள்ள அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்திற்குள் இலங்கையும் இத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யும் வகையில் நடந்து கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. இலங்கை வரிச்சலுகையை மீண்டும் பெறுவதற்கென எடுக்கும் முயற்சிகளுக்கு தாங்களும் உதவ தயாராக இருப்பதாக மேற்படி இராஜதந்திரி தெரிவித்தார்.

இலங்கையின் அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பல வருடங்களாக யுத்தம் நடத்திய முறை தொடர்பாக தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்களுக்கு முகம் கொடுத்து வந்தது. பல்லாயிரக்கணக்கான தமிழ் சிவிலியன்களை படுகொலை செய்தமை, உதவிப்பணியாளர்களை கொலை செய்தமை, ஆகியன உட்பட அரசாங்க படைகள் பெருமளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டது.

ஐரேப்பிய ஒன்றியம் நடத்திய விசாரணைகளிலிருந்து சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனம், சித்திரவதைக்கு எதிரான சாசனம், சிறுவர் உரிமைகள் சாசனம் ஆகிய ஐக்கியநாடுகள் சாசனங்கள் மூன்றினை இலங்கை அரசாங்கம் மீறியுள்ளதாக தெதியவந்துள்ளது.

அதேவேளை, விசாரணைகள் நடத்தப்பட்ட காலப்பகுதியில் இலங்கை எவ்வளவோ திருந்தி விட்டதால் வரிச்சலுகையை நிறுத்துவதற்கான சம்பிரதாயபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று தாம் நம்புவதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், "வரிச்சலுகை நிறுத்தம் அமுல் செய்யப்படுவதை எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நிறுத்த முடியும். ஆனால் அதற்கு ஐரோப்பிய ஆணைக்குழுவின் சிபார்சும், அங்கத்துவ நாடுகளினது இணக்கமும் தேவை" என்று கூறினார்.

எவ்வாறாயினும், இலங்கை மனித உரிமை பேணல் விடயத்தில் திருப்திகரமாக நடந்து கொள்ளவில்லை என்பஐ தற்போதைய அபிப்பிராயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Ler Mais

ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை நிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்


இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகையை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. ஐ.நா.வின் மூன்று சாசனங்களை மீறியதன் காரணமாகவே இலங்கைக்கு எதிராக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சம்பிரதாயபூர்வமான நடவடிக்கைகளை இம்மாத இறுதியில் மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணக்கம் கண்டுள்ள போதிலும் மேற்படி தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இன்னும் 6 மாத காலம் எடுக்கும் என்று ஒன்றியத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜிஎஸ்பி சலுகையைth தக்க வைத்துக் கொள்வதற்கு அல்லது அதனை மீளப் பெறுவதற்கு ஏதுவான நடவடிக்கைகன இலங்கை மேற்கொள்ளவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று ராஜதந்திரி ஒருவர் சர்வதேச செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவாக்கப்பட்ட சலுகைத் திட்டத்தின் (ஜீ.எஸ்.பி.) கீழ் 16 வறிய நாடுகள் வர்த்தக சலுகைகளை பெற்றுக் கொண்டுள்ளன. இச்சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கு சமூக மற்றும் மனித உரிமை பேணல் போன்ற விடயங்களில் கடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

இலங்கைக்கு வர்த்தக சலுகைகளை நிறுத்துவதற்காக கடந்த வாரம் எடுக்கப்பட்ட இத்தீர்மானத்தை, பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி ஒன்றுகூடும் ஐரோப்பிய நிதியமைச்சர்கள் அங்கீகரிக்கவுள்ளனர்.

உற்பத்தியாளர்களும் வர்த்தகர்களும் புதிய விதிகளுக்கேற்ப சீராக்கல்களை மேற்கொள்ள அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்திற்குள் இலங்கையும் இத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யும் வகையில் நடந்து கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. இலங்கை வரிச்சலுகையை மீண்டும் பெறுவதற்கென எடுக்கும் முயற்சிகளுக்கு தாங்களும் உதவ தயாராக இருப்பதாக மேற்படி இராஜதந்திரி தெரிவித்தார்.

இலங்கையின் அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பல வருடங்களாக யுத்தம் நடத்திய முறை தொடர்பாக தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்களுக்கு முகம் கொடுத்து வந்தது. பல்லாயிரக்கணக்கான தமிழ் சிவிலியன்களை படுகொலை செய்தமை, உதவிப்பணியாளர்களை கொலை செய்தமை, ஆகியன உட்பட அரசாங்க படைகள் பெருமளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டது.

ஐரேப்பிய ஒன்றியம் நடத்திய விசாரணைகளிலிருந்து சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனம், சித்திரவதைக்கு எதிரான சாசனம், சிறுவர் உரிமைகள் சாசனம் ஆகிய ஐக்கியநாடுகள் சாசனங்கள் மூன்றினை இலங்கை அரசாங்கம் மீறியுள்ளதாக தெதியவந்துள்ளது.

அதேவேளை, விசாரணைகள் நடத்தப்பட்ட காலப்பகுதியில் இலங்கை எவ்வளவோ திருந்தி விட்டதால் வரிச்சலுகையை நிறுத்துவதற்கான சம்பிரதாயபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று தாம் நம்புவதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், "வரிச்சலுகை நிறுத்தம் அமுல் செய்யப்படுவதை எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நிறுத்த முடியும். ஆனால் அதற்கு ஐரோப்பிய ஆணைக்குழுவின் சிபார்சும், அங்கத்துவ நாடுகளினது இணக்கமும் தேவை" என்று கூறினார்.

எவ்வாறாயினும், இலங்கை மனித உரிமை பேணல் விடயத்தில் திருப்திகரமாக நடந்து கொள்ளவில்லை என்பஐ தற்போதைய அபிப்பிராயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Ler Mais

எதிரணியை அடக்கவே அவசரகாலச் சட்டம் : லக்ஷ்மன் செனவிரத்ன


வட பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றி இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்ற அவசர காலச் சட்டம் தேவையெனில் ஏன் நாடு முழுவதும் அச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்? வடபகுதியில் மட்டும் அதை அமுல்படுத்தலாமே?" என ஐ.தே.கட்சி எம்.பி.லக்ஷ்மன் செனவிரத்ன கேள்வி எழுப்பினார்.

அவசர காலச் சட்டத்தை அரசாங்கம் எதிரணிகளை அடக்குவதற்கே பயன்படுத்துகிறது. எனவே ஐ.தே.கட்சி இதனை எதிர்க்கின்றதென்றும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே லக்ஷ்மன் செனவிரட்ன எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

"வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டது. ஏ9 பாதை திறக்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலும் முடிந்து விட்டது. பாதுகாப்பு செயலாளர் புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டனர் என்று உறுதியுடன் கூறியுள்ளார். அவ்வாறெனில் ஏன், எதற்கு அவசர காலச் சட்டம் தேவைப்படுகிறது? ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் லங்கா பத்திரிகை தடை செய்யப்பட்டது.

எதிரணி ஆதரவாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். இவையெல்லாம் அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்தியே மேற்கொள்ளப்படுகிறது. பொதுத் தேர்தலில் எமது ஆதரவாளர்கள் வாக்களிப்பதைத் தடுக்கவே அச்சுறுத்தப்படுகின்றார்கள்.

ஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டு இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். உண்மையை எழுத முடியாது தடுக்கப்படுகிறது. அரசாங்கத்தைச் சார்ந்தோர் பகிரங்கமாக எமது ஆதரவாளர்களை தாக்குகின்றனர். துப்பாக்கிகளை பயன்படுத்துகின்றனர். இவ்வாறானவர்களை ஏன் அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி கைது செய்ய முடியாது?

நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் அரசாங்கத் தரப்பில் அடாவடித்தனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு அவசர காலச் சட்டம் தேவையென பிரதமர் சொல்கிறார்.

அப்படியானால் வடபகுதிக்கு மட்டும் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தலாமே? ஏன் நாடு முழுவதும் அவசர காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட வேண்டும்?

நாட்டில் சட்டம் செத்துவிட்டது. ஐ.தே.கட்சியை சார்ந்த பிள்ளைகள் பாடசாலை செல்ல முடியாதுள்ளது. தேர்தல் வெற்றியால் மஹியங்கனை நகரில் எதிர்க் கட்சியினர் மீது அடக்கு முறை பாரியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. எனவே ஐ.தே.கட்சி அவசர காலச் சட்டத்திற்கு ஆதரவினை வழங்காது. பொலிசாருக்கு தமது கடமைகளை நிறைவேற்ற முடியாதுள்ளது. ஹெல உறுமய பௌத்த குருமார் இன்றைய வன்முறைகள் தொடர்பாக என்ன சொல்கின்றனர்?

ஏன் தர்மத்திற்கு மாறுபட்ட வன்முறைகளுக்கு இடமளிக்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
Ler Mais

எதிரணியை அடக்கவே அவசரகாலச் சட்டம் : லக்ஷ்மன் செனவிரத்ன


வட பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றி இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்ற அவசர காலச் சட்டம் தேவையெனில் ஏன் நாடு முழுவதும் அச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்? வடபகுதியில் மட்டும் அதை அமுல்படுத்தலாமே?" என ஐ.தே.கட்சி எம்.பி.லக்ஷ்மன் செனவிரத்ன கேள்வி எழுப்பினார்.

அவசர காலச் சட்டத்தை அரசாங்கம் எதிரணிகளை அடக்குவதற்கே பயன்படுத்துகிறது. எனவே ஐ.தே.கட்சி இதனை எதிர்க்கின்றதென்றும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே லக்ஷ்மன் செனவிரட்ன எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

"வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டது. ஏ9 பாதை திறக்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலும் முடிந்து விட்டது. பாதுகாப்பு செயலாளர் புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டனர் என்று உறுதியுடன் கூறியுள்ளார். அவ்வாறெனில் ஏன், எதற்கு அவசர காலச் சட்டம் தேவைப்படுகிறது? ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் லங்கா பத்திரிகை தடை செய்யப்பட்டது.

எதிரணி ஆதரவாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். இவையெல்லாம் அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்தியே மேற்கொள்ளப்படுகிறது. பொதுத் தேர்தலில் எமது ஆதரவாளர்கள் வாக்களிப்பதைத் தடுக்கவே அச்சுறுத்தப்படுகின்றார்கள்.

ஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டு இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். உண்மையை எழுத முடியாது தடுக்கப்படுகிறது. அரசாங்கத்தைச் சார்ந்தோர் பகிரங்கமாக எமது ஆதரவாளர்களை தாக்குகின்றனர். துப்பாக்கிகளை பயன்படுத்துகின்றனர். இவ்வாறானவர்களை ஏன் அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி கைது செய்ய முடியாது?

நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் அரசாங்கத் தரப்பில் அடாவடித்தனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு அவசர காலச் சட்டம் தேவையென பிரதமர் சொல்கிறார்.

அப்படியானால் வடபகுதிக்கு மட்டும் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தலாமே? ஏன் நாடு முழுவதும் அவசர காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட வேண்டும்?

நாட்டில் சட்டம் செத்துவிட்டது. ஐ.தே.கட்சியை சார்ந்த பிள்ளைகள் பாடசாலை செல்ல முடியாதுள்ளது. தேர்தல் வெற்றியால் மஹியங்கனை நகரில் எதிர்க் கட்சியினர் மீது அடக்கு முறை பாரியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. எனவே ஐ.தே.கட்சி அவசர காலச் சட்டத்திற்கு ஆதரவினை வழங்காது. பொலிசாருக்கு தமது கடமைகளை நிறைவேற்ற முடியாதுள்ளது. ஹெல உறுமய பௌத்த குருமார் இன்றைய வன்முறைகள் தொடர்பாக என்ன சொல்கின்றனர்?

ஏன் தர்மத்திற்கு மாறுபட்ட வன்முறைகளுக்கு இடமளிக்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
Ler Mais

அரசியல் தீர்வு வேண்டும் என்பதைத் தமிழ் மக்கள் தேர்தல் மூலம் உணர்த்திவிட்டனர் : அரியநேத்திரன்


தமிழ்ச் சமூகம் என்பது தனித்துவம்மிக்கதொரு இனமாகும். வடக்கு, கிழக்கு என்பது தமிழரின் பூர்வீகத் தாயகம் என்ற உண்மையை உணர்த்தியுள்ள தமிழ் மக்கள் தமக்கு ஏற்றதான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதையும் தேர்தல் முடிவுகளில் வலியுறுத்தியுள்ளனர். இதனை உணர்ந்து ஜனாதிபதியும் அரசாங்கமும் நடந்து கொள்ள வேண்டும்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட எம்.பி. அரியநேத்திரன் நேற்று சபையில் தெரிவித்தார்.

புலிகளை அழித்து விட்டதாகக் கூறுகின்ற அரசாங்கத்தால் அவசரகாலச் சட்டத்துக்கு மாத்திரம் முடிவு கட்ட முடியாதிருக்கின்றது. இதனை மேலும் நீடித்து அடுத்துவரும் பொதுத் தேர்தலிலும் அதிகாரத்தைக் கைப்பற்றி பாதுகாக்க முனைகின்றனர். அவசரகாலச் சட்டத்தை ரத்துச் செய்து நீதியான தேர்தலொன்றை நடத்த முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்துக் கொள்வதற்கான விவாதம் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அரியநேத்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்துள்ள போதிலும் வன்முறைகளும் அதேபோல் உயிர் அச்சுறுத்தல்களும் குறைந்தபாடில்லை. தற்போது எமது குழுத்தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் எமது உறுப்பினர் தோமஸ் வில்லியம் உட்பட எனக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களை நான் சபையில் சமர்ப்பிக்கின்றேன்.

எம்மைக் கொலை செய்வதற்கான சதித் திட்டம் மட்டக்களப்பில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்தே தீட்டப்பட்டுள்ளது. அவ்வாறு எமது உயிர்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் அசம்பாவிதங்களும் ஏற்படுமிடத்து அதற்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமுமே ஏற்க வேண்டும்.

இன்று கிழக்கில் அத்துமீறிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து நான் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தியிருந்தேன். இருந்த போதிலும் தேர்தலுக்கு முன்னர் கிழக்கில் பிரசாரங்களை மேற்கொண்டிருந்த கிழக்கு மாகாண ஆளுநர் அங்கு சட்டவிரோதக் குடியேற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லையென அப்பட்டமான பொய்யைக் கூறினார்.

ஆனாலும் என்னிடம் அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இதனை ஒப்புவிக்க முடியும். வேண்டுமானால் கிழக்கு மாகாண ஆளுநர் இது தொடர்பில் என்னுடன் நேரடி விவாதத்துக்கு வர முடியுமா என்று கேட்கிறேன்.

ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இந்த தேர்தல் முடிவுகள் மூலம் அரசாங்கத்துக்கு தமிழ் மக்களின் நிலைப்பாடுகளும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் தனித்துவமான இனம். வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம். எனவே தமிழ் மக்கள் எதிர்பார்த்திருக்கின்ற நியாயமான அரசியல் தீர்வு தமக்கு தரப்பட வேண்டும் என்பதையும் உணர்த்தியுள்ளனர்.

இந்த யதார்த்தபூர்வ உண்மைகளை ஜனாதிபதியும் அரசாங்கமும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுடன் அதற்கேற்றவாறு செயற்பட வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கின்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்களின் தீர்மானத்தை உணர்ந்து கொள்ள வேண்டிய ஜனாதிபதி உண்மையான தமிழ் தலைமைகளை அழைத்துப் பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

62 வருட கால சுதந்திர வரலாற்றில் கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் அவசர காலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தனை காலகட்டத்தில் நாட்டின் அபிவிருத்தி குறித்து பேசியதை விட அவசர காலச் சட்டம் குறித்த பேச்சுக்களே அதிகம் என்று கூறலாம்.

தற்போது புலிகள் இல்லை. புலிகளை அழித்துக் கட்டிவிட்டதாகக் கூறுகின்ற அரசாங்கம், அதற்காக ஏற்படுத்தப்பட்ட அவசர காலச் சட்டத்தை மாத்திரம் முடிவக்குக் கொண்டு வர முடியாதிருக்கின்றது.

எனவே அடுத்து நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலுக்கு முன்னர் தற்போது அமுலில் இருக்கின்ற அவசர காலச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்ற அதேவேளை அவசரகாலச் சட்டம் இல்லாத ஒரு சூழலில் பொதுத் தேர்தலை நடத்தி அதில் சுதந்திரமாக வாக்களிக்கக் கூடிய நீதியான தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்" என்றார்.
Ler Mais

அரசியல் தீர்வு வேண்டும் என்பதைத் தமிழ் மக்கள் தேர்தல் மூலம் உணர்த்திவிட்டனர் : அரியநேத்திரன்


தமிழ்ச் சமூகம் என்பது தனித்துவம்மிக்கதொரு இனமாகும். வடக்கு, கிழக்கு என்பது தமிழரின் பூர்வீகத் தாயகம் என்ற உண்மையை உணர்த்தியுள்ள தமிழ் மக்கள் தமக்கு ஏற்றதான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதையும் தேர்தல் முடிவுகளில் வலியுறுத்தியுள்ளனர். இதனை உணர்ந்து ஜனாதிபதியும் அரசாங்கமும் நடந்து கொள்ள வேண்டும்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட எம்.பி. அரியநேத்திரன் நேற்று சபையில் தெரிவித்தார்.

புலிகளை அழித்து விட்டதாகக் கூறுகின்ற அரசாங்கத்தால் அவசரகாலச் சட்டத்துக்கு மாத்திரம் முடிவு கட்ட முடியாதிருக்கின்றது. இதனை மேலும் நீடித்து அடுத்துவரும் பொதுத் தேர்தலிலும் அதிகாரத்தைக் கைப்பற்றி பாதுகாக்க முனைகின்றனர். அவசரகாலச் சட்டத்தை ரத்துச் செய்து நீதியான தேர்தலொன்றை நடத்த முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்துக் கொள்வதற்கான விவாதம் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அரியநேத்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்துள்ள போதிலும் வன்முறைகளும் அதேபோல் உயிர் அச்சுறுத்தல்களும் குறைந்தபாடில்லை. தற்போது எமது குழுத்தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் எமது உறுப்பினர் தோமஸ் வில்லியம் உட்பட எனக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களை நான் சபையில் சமர்ப்பிக்கின்றேன்.

எம்மைக் கொலை செய்வதற்கான சதித் திட்டம் மட்டக்களப்பில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்தே தீட்டப்பட்டுள்ளது. அவ்வாறு எமது உயிர்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் அசம்பாவிதங்களும் ஏற்படுமிடத்து அதற்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமுமே ஏற்க வேண்டும்.

இன்று கிழக்கில் அத்துமீறிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து நான் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தியிருந்தேன். இருந்த போதிலும் தேர்தலுக்கு முன்னர் கிழக்கில் பிரசாரங்களை மேற்கொண்டிருந்த கிழக்கு மாகாண ஆளுநர் அங்கு சட்டவிரோதக் குடியேற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லையென அப்பட்டமான பொய்யைக் கூறினார்.

ஆனாலும் என்னிடம் அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இதனை ஒப்புவிக்க முடியும். வேண்டுமானால் கிழக்கு மாகாண ஆளுநர் இது தொடர்பில் என்னுடன் நேரடி விவாதத்துக்கு வர முடியுமா என்று கேட்கிறேன்.

ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இந்த தேர்தல் முடிவுகள் மூலம் அரசாங்கத்துக்கு தமிழ் மக்களின் நிலைப்பாடுகளும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் தனித்துவமான இனம். வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம். எனவே தமிழ் மக்கள் எதிர்பார்த்திருக்கின்ற நியாயமான அரசியல் தீர்வு தமக்கு தரப்பட வேண்டும் என்பதையும் உணர்த்தியுள்ளனர்.

இந்த யதார்த்தபூர்வ உண்மைகளை ஜனாதிபதியும் அரசாங்கமும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுடன் அதற்கேற்றவாறு செயற்பட வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கின்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்களின் தீர்மானத்தை உணர்ந்து கொள்ள வேண்டிய ஜனாதிபதி உண்மையான தமிழ் தலைமைகளை அழைத்துப் பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

62 வருட கால சுதந்திர வரலாற்றில் கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் அவசர காலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தனை காலகட்டத்தில் நாட்டின் அபிவிருத்தி குறித்து பேசியதை விட அவசர காலச் சட்டம் குறித்த பேச்சுக்களே அதிகம் என்று கூறலாம்.

தற்போது புலிகள் இல்லை. புலிகளை அழித்துக் கட்டிவிட்டதாகக் கூறுகின்ற அரசாங்கம், அதற்காக ஏற்படுத்தப்பட்ட அவசர காலச் சட்டத்தை மாத்திரம் முடிவக்குக் கொண்டு வர முடியாதிருக்கின்றது.

எனவே அடுத்து நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலுக்கு முன்னர் தற்போது அமுலில் இருக்கின்ற அவசர காலச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்ற அதேவேளை அவசரகாலச் சட்டம் இல்லாத ஒரு சூழலில் பொதுத் தேர்தலை நடத்தி அதில் சுதந்திரமாக வாக்களிக்கக் கூடிய நீதியான தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்" என்றார்.
Ler Mais

ஜனாதிபதி இன்று ரஷ்யா பயணம்


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ரஷ்யா சென்றுள்ளார். எதிர்வரும் 9 ஆம் திகதி வரை அவர் ரஷ்யாவில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெட்வேடெவ்வைச் சந்திக்கும் ஜனாதிபதி அந்நாட்டின் கடன் திட்டம் ஒன்று குறித்து பேச்சு நடத்தவுள்ளார்.

மகிந்த ராஜபக்ஷ, இரண்டாவது முறையாகவும், ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயமாக இது அமைகிறது.

பிரத்தியேக விமானம் ஒன்றில் இவர் இன்று காலை பயணித்ததாக, விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
Ler Mais

ஜனாதிபதி இன்று ரஷ்யா பயணம்


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ரஷ்யா சென்றுள்ளார். எதிர்வரும் 9 ஆம் திகதி வரை அவர் ரஷ்யாவில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெட்வேடெவ்வைச் சந்திக்கும் ஜனாதிபதி அந்நாட்டின் கடன் திட்டம் ஒன்று குறித்து பேச்சு நடத்தவுள்ளார்.

மகிந்த ராஜபக்ஷ, இரண்டாவது முறையாகவும், ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயமாக இது அமைகிறது.

பிரத்தியேக விமானம் ஒன்றில் இவர் இன்று காலை பயணித்ததாக, விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
Ler Mais

வெளிநாட்டு பிரஜைகள் அரசியல் ஆய்வுகளுக்காக இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்படும்


வெளிநாட்டு பிரஜைகள் அரசியல் ஆய்வுகளுக்காக இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்படும் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியல் விசாரணை மற்றும் ஆய்வு என்ற பெயரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நபர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதாக பாதுகாப்பு அமைச்சிற்கு கிடைக்கப் பெற்ற தகவல்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைநகர் கொழும்பின் நட்சத்திர விடுதிகளில் தங்கியிருந்து அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சில வெளிநாட்டு சக்திகள் முனைப்பு காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நபர்கள் தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் தகவல்களை திரட்டியுள்ளனர்.
Ler Mais
 
JKRTAMIL | by TNB ©2010