மக்களே எழுச்சிகொள்ளுங்கள்" ஐ.தே.க சிலாபத்தில் பேரணி

அரசாங்கத்தின் தற்போதைய போக்கினை கண்டித்தும், இது தொடர்பாக பொதுமக்களின் விழிப்புணர்வின் அவசியத்தினை வலியுறுத்தியும் “மக்களே எழுச்சிகொள்ளுங்கள்" எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய கட்சி இன்று சனிக்கிழமை புத்தளம் மாவட்டம் சிலாபம் நகரிலிருந்து முன்னேஸ்வரம் வரை பேரணியொன்றை நடாத்தியது.
சிலாபத்திலிருந்து பிற்பகல் 1 மணியளவில் ஆரம்பமான இப்பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார ஆகியோருடன் 300 பேர் வரையிலான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
பேரணியின் நிறைவில் முன்னேஸ்வரம் ஆலயத்தில் விசேட பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக