ரஷ்ய தீ விபத்து : இராணுவ உயர் அதிகாரிகள் பலர் பதவி இழப்பு

ரஷ்யாவில் உலியனோஸ் வக் பகுதியிலுள்ள வோல்கா நகரில் இராணுவ ஆயுத கிடங்கு உள்ளது. கடந்த 13ஆந்திகதி அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில், இராணுவத் தளவாடங்கள், வெடிபொருட்கள் எரிந்து நாசமாயின, தீயை அணைக்கச் சென்ற 2 வீரர்கள் உடல் கருகினர். மேலும் அங்கு பணிபுரிந்த 8 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இதற்குப் பாதுகாப்பு (இராணுவ) அமைச்சகத்தின் கவனக்குறைவும், அலட்சியமும்தான் காரணம் எனத் தற்போது தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து ரஷ்ய இராணுவத்தினர் மற்றும் பல உயர் அதிகாரிகளை அதிபர் மெத்வதேவ் பதவி விலக்க உத்தரவிட்டுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக