JKR. Blogger இயக்குவது.

சனி, 12 டிசம்பர், 2009

அமெரிக்கர் இருவரை இலங்கை நாடு கடத்தியுள்ளது


அமெரிக்காவில் பல மோசடிக்குற்றச்சாட்டுக்கு உள்ளான தம்பதியரை இலங்கை நாடு கடத்தியுள்ளது. இவர்கள் இருவரும் நேற்று இரவு நாடு கடத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுதுறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜோன் மற்றும் மாரியன் மோர்கன் என்ற இந்த தம்பதியினர்,அமரிக்காவின் பங்கு பரிமாற்ற ஆணைக்குழுவின் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தனர் எனினும் இவர்கள் இருவரும் இலங்கைக்கு தப்பி வந்துள்ளனர்.

2006 ஆம் ஆண்டு இந்த தம்பதியினர், சுமார் 100 முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 10 மில்லியன் டொலர்களை பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அமரிக்காவில், இந்த இருவருக்கும் எதிரான பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010