JKR. Blogger இயக்குவது.

செவ்வாய், 15 டிசம்பர், 2009

கணவனை எரித்த மனைவி தீயில் கருகி பரிதாப பலி.


தாய் வீட்டுக்கு செல்ல அனுமதி தராத கணவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த மனைவி, தன் மீதும் தீ வைத்துக் கொண்டார். இதில் மனைவி இறந்தார். கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒசூர் அருகேயுள்ள இடையநல்லூரை சேர்ந்தவர் ரமேஷ் (28). விவசாய கூலித் தொழிலாளி. மனைவி மதுஸ்ரீ (22). 2 ஆண் குழந்தைகள் உள்ளன. கர்நாடக மாநிலம் ஆனைக்கல்லில் உள்ள தாய் வீட்டுக்கு செல்ல கணவரிடம் அனுமதி கேட்டுள்ளார். ரமேஷ் மறுத்துவிட்டு வேலைக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணவருக்கு சாப்பாடு போட்டுக் கொண்டே, தாய் வீடு செல்ல மீண்டும் மதுஸ்ரீ அனுமதி கேட்டார். அவர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த மதுஸ்ரீ, வீட்டில் இருந்து மண்ணெண்ணெய் கேனை எடுத்து வந்தார். தன் மீதும் ரமேஷ் மீதும் எண்ணெயை ஊற்றி தீ வைத்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இருவரின் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து ஒசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் பெங்களூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மதுஸ்ரீ நேற்றிரவு இறந்தார். ஆபத்தான நிலையில் ரமேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் மத்திகிரி இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010