கட்டுகஸ்தோட்டை இராணுவவீரர் ஆயுதங்களுடன் கைது

கட்டுகஸ்தோட்டை பஸ்கொல்லாமட பகுதியில் இராணுவக் கோப்ரல் ஒருவர் துப்பாக்கிகள், மற்று ஒருதொகை ரவைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி குற்றத் தடுப்புப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட குழுவினரால் இன்று அதிகாலை குறிப்பிட்ட இராணுவக் கோப்ரல் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
சந்தேக நபரின் வீட்டிலிருந்து ரீ 56 ரகத் துப்பாக்கிகள் 4, மெகசீன்கள் 4, கைத்துப்பாக்கி 1, மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டதாகப் பொலிசார் தெரிவித்தனர்.
இந்த இராணுவ கோப்ரல் ஆனையிறவு இராணுவ முகாமில் கடமையாற்றியவரென விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக