JKR. Blogger இயக்குவது.

திங்கள், 28 செப்டம்பர், 2009

பொலிஸ் சேவைக்கு வடக்கிலிருந்து 500 பேர் இணைப்பு

பொலிஸ் சேவைக்கு வட மாகாணத்திலிருந்து 500 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்திலிருந்து 500 பேரை சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சைகள் இன்று நடைபெற்றன.

நாளையும் நேர்முகப் பரீட்சைகள் நடைபெறுமென யாழ்.பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச். மாரப்பன தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்திலுள்ள யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, காங்கேசன்துறை, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களில் இந்த நேர்முகப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

இந்த நேர்முகப் பரீட்சைக்கு இப்பிரதேசங்களிலிருந்து இதுவரை மொத்தமாக 6,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுள் சுமார் 400 பெண்களினது விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

நாட்டிலிருந்து பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 3 தசாப்தங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் பொலிஸ் ஆட்சேர்ப்பு நடைபெறுவது இதுவே முதற்தடவையாகும்.

இதன் அடுத்த கட்டமாக சப் இன்ஸ்பெக்டர் தெரிவுக்காக விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படும் என ஜி.எச். மாரப்பன மேலும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010