JKR. Blogger இயக்குவது.

திங்கள், 19 அக்டோபர், 2009

ஆஸி. பிரதமர் இந்தோனேஷியாவுக்கு இன்று அவரசர விஜயம்


படகுகள் மூலம் சட்டவிரோதமான முறையில், ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்படுவோர், குறிப்பாக சமீபத்தில் இந்தோனேஷியாவில் வழிமறிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 260 அகதிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சு நடத்த ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட் இன்று இந்தோனேஷியாவுக்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார்.

தற்போது இந்தோனேஷிய அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்கும் குறித்த 260 இலங்கையர்களும் ஆஸ்திரேலியா தமக்கு அரசியல் தஞ்சம் வழங்கவேண்டும் என்று கோரி வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் கோரிக்கை வெற்றியளிக்குமா இல்லையா என்பது ஆஸி. பிரதமரின் இந்தோனேஷிய விஜயம் முடிந்த பிறகே தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோனேஷியக் கடற்பரப்பில் அதன் கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டமையால், இவர்கள் சம்பந்தப்பட்ட விடயம் தற்போது தமது உள்நாட்டு விவகாரம் என்றும், எனவே தாமே இவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்றும் ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சி கண்டனம்

அதேநேரம், ஆஸ்திரேலியாவின் பிரதான எதிர்க்கட்சி, ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்படுபவர்களைத் தடுத்து நிறுத்த ஆஸ்திரேலிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கத்தவறிவிட்டது என்று கடுமையாகச் சாடி வருகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010