JKR. Blogger இயக்குவது.

புதன், 21 அக்டோபர், 2009

ராஜரட்னத்தின் பங்குகள் தொடர்பில் ஆய்வு : பங்கு மாற்ற ஆணையர் தகவல்

மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பிரபல கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்னத்திற்கு சொந்தமான பங்குகள் தொடர்பில் இலங்கை பங்கு பரிமாற்ற ஆணைக்குழுவின் பாதுகாப்புப் பிரிவு ஆராய்ந்துள்ளது என அதன் பணிப்பாளர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்னம், இலங்கையில் மிக பெரிய முதலீட்டாளர் என்பதால் அவரது கொள்வனவுகள் குறித்த தகவல்களைத் திரட்டவுள்ளதாக பங்கு பரிமாற்ற ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் இவர் 150 மில்லியன் டொலர் வரை முதலீடு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010