JKR. Blogger இயக்குவது.

வெள்ளி, 2 அக்டோபர், 2009

குருநாகல் குண்டுவெடிப்பில் பாடசாலை சிறுமியும் சாரதியும் பலி


- குருநாகலில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று காலை குருநாகல், உடுவல்பொலவில் வேனொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 8 சிறுவர்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைபெற்று வந்த மாலியாதேவ பாலிகா வித்தியாலய மாணவியான எரந்திகா திஸாநாயக்கவும் (12 வயது) உயிரிழந்துள்ளார். அதேவேளை வேனின் சாரதியும் உயிரிழந்துள்ளார்.ஏனையோர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010