தென்னாபிரிக்க அமைச்சர் செட்டிகுளம் விஜயம்

வவுனியா அரச அதிபர் பீ எம் எஸ் சாள்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் தென்னாபிரிக்க அமைச்சரை வரவேற்றனர்.
இந்த நிகழ்வில் வன்னிப் பாதுகாப்புப் படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவும் கலந்துகொண்டார்.
நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களை மீளக் குடியமர்த்தல் மற்றும் அவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் குறித்து வவுனியா அரச அதிபர் பீ எம் எஸ் சாள்ஸ் தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சருக்குத் தெளிவுபடுத்தினார்.
இதேவேளை மலேஷியாவிலிருந்து வந்திருந்த விசேட தூதுக் குழுவினரும் நேற்று மாலை செட்டிகுளம் இடம்பெயர்ந்தோர் முகாமைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக