
அன்று “தன்னைத்தானே திருத்திக்கொள் சமூகம் தானாகவே திருந்தும்“ என்று விபுலாநந்தர் கூறிய விடையம் இன்றைய கிழக்கு அரசியல் வாதிகளுக்கு சுறையாடுவதை தான் உணர்தியதோ தெரியவில்லை!!!. மன்னர் ஆட்சிகாலத்தில் மக்கள் மானத்தோடு வாழ்ந்தார்கள்! ஐனநாயகம் பிறந்த காலத்தில் மக்கள் நடைபிணமாக வாழ்கின்றார்கள்!! பணம் என்னும் மோகத்தில் பாதி தமிழர்களின் பிராணத்தை குடித்த பிசாசுகள் என்று அழிகின்றதோ அன்று தான் தமிழன் வாழ்வான் என்பது தான் இலங்கை தமிழர்களின் துர்பாக்கியம்!!! கிழக்கு மகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பல விதத்தில் பணத்தை சூறையாடி கொழும்பு பத்திரமுல்லை பிரதேசத்தில் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியில் வீடு ஒன்று வேண்டியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் பலருக்கு சச்சையை எழுப்பியுள்ளது. இந்த மாளிகை சந்திரகாந்தன் என்ற பெயருக்கு வேண்டப் பட்டுள்ளதாக வீட்டினை விற்பனைக்காக ஏற்ப்பாடு செய்த தரகர்; மூலம் வெளிவந்த செய்தியை அடுத்தே இந்த விசனம் எழுந்துள்ளது. இத்தனை வசதிகளும் அதிகாரமும் உள்ள ஒரு முதல்லமைச்சர் எதற்கு தன்மாவட்டத்தை விட்டு வேறு ஒரு மாவட்டத்தில் மாளிகை வாங்கவேண்டும் என்ற கேள்வியும் எழுகின்றது. கடந்த காலத்தில் நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடித்த பிரபாகரன் கட்டிய தடாகம் பற்றி பல ஊடகங்களில் வந்த பொழுது அவருக்கு ஆதரவாக இருந்த மக்கள் மற்றும் ஊடகங்கள் அதனை பிரசுரிக்கத் தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் இன்று விடுதலை என்ற பெயரில் தொடங்கிய அத்தனை கூட்டங்களும் கொழும்பில் மற்றும் பல பிரமுகர்களை வைத்து அல்லது அடித்த பணத்தில் பல பிரமுகர்களை உருவாக்கி வியாபாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இது மன வருத்தற்குரிய விடையம் என்பதை பலர் சுட்டிக்காட்டினார்கள் என்பதை நாம் மறந்து விடமுடியாது. இன்று பட்டனியும் இன்னல்களும் நிறைந்த நாடாக இலங்கை இருக்கும் பொழுது சொத்துக்கள் சேர்க்கும் எண்ணத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இயங்கும் அத்தனை நிர்வாகமும் நிர்வானம் ஆக்கப்படவேண்டும். என்பது மக்களின் விருப்பம். இந்த நிலையில் பிள்ளையான் உண்மையில் இது வாங்கியிருந்தால் அதற்கான வருமானத்தையும் அதற்கு குரிய விடைகளையும் மக்கள் மத்தியில் சமர்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அப்படிசமர்பிக்காத பட்சத்தில் கருணாவின் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்தக் கொள்ளும் பொழுது பல ஊடகங்கள் மாற்றுக் கருத்தக் கொண்ட கயவருக்கும் சார்பாகத்தான் எழுதுவர்கள் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை என்று மக்கள் தெரிவித்துவருகின்றார்கள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக