JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

மட்டக்களப்பு-மன்னார் பஸ் சேவை மீண்டும் ஆரம்பம்

மட்டக்களப்புக்கும் மன்னாரிற்கும் இடையிலான நேரடி இ.போ.ச. பஸ் சேவை 3 வருடங்களின் பினனர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மற்றும் மட்டக்களப்பு இ.போ.ச டிப்போக்கள் இணைந்து தினசரி இவ் பஸ் சேவையை நடத்தி வந்தன.

மதவாச்சி சோதனைச் சாவடி ஊடாக போக்குவரத்து செய்வது குறித்து பாதுகாப்பு தரப்பினரால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் காரணமாக குறிப்பிட்ட இ.போ.ச. பஸ் சேவை இடைநிறுத்தப்டப்டிருந்தது.

தற்போது அக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதையடுத்து பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010