மன்னார் கோட்டை சோதணைநிலையத்தினால் பயணிகள் பாரிய அசெளரியங்களுக்கு முகம்

மன்னார் கோட்டை சோதணைநிலையத்தில் உள்ள வீதிகள் குண்றும் குழியுமாக காணப்படுவதால் சோதணைகளை மேற்கொள்ள உள் செல்லும் பயணிகள் பாரிய அசெளரியங்களுக்கு முகம் கொடுப்பதாக விசனம் தெரிவிக்கின்றார்கள்
மன்னாரில் இருந்து வெளியிடங்களுக்குச் செல்லும் சகல விதமான வாகனங்களும் கோட்டை சோதணை நிலையத்திற்குள் சோதணை இடப்படுகின்றது. இதே வேளை வேறு இடங்களில் இருந்து வரும் சகல வாகணங்களும் கோட்டை சோதணை நிலையத்திற்குள் சென்று சோதணை நடவடிக்கைகளை மேற்கொண்டபின்பே மன்னார் நகருக்குள் செல்ல முடியும். இந்த நிலையில் கோட்டை சோதணை நிலையத்தில் உள்ள பகுதிகள் முழுவதும் பாரிய குண்றும் குழியுமாக காணப்படுகிறது.தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக அப் பகுதிகளில் மழைநீர் தேங்கிநின்று குளம் போன்று காட்சியழிக்கின்றது. இதனால் பயணிகள் ஏறி இறங்குவதில் பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துவருகின்றனர். இந்த கோட்டை சோதணை நிலையம் ஆனது கடற்படையினரால் அமைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக