எயிட்ஸ் நோய்க்கெதிராக மட்டக்களப்பில் பாரிய பேரணி

மட்டக்களப்பு மாவட்டத்தில் எயிட்ஸ் நோய்க்கெதிராக இன்று (12.12.2009.) காலை பாரிய கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது. சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
மட்டக்களப்பு மாகாண சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்னால் ஆரம்பமான ஊர்வலம் பல மணி நேரம், பல வீதிகள் வழியாகச் சென்று முடிவடைந்தது.
மட்டக்களப்பு பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம், தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் எஸ் தட்சணாமூர்த்தி உட்படப் பலர் இதில் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை இருவர் எயிட்ஸ் நோயினால் மரணமடைந்துள்ளனர்; 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக