JKR. Blogger இயக்குவது.

செவ்வாய், 12 ஜனவரி, 2010

ஆளும் - எதிர்க்கட்சிப் பிரமுகர்களின் வீடுகள் மீது தாக்குதல்


மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்கள் இல்லங்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கைக்குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

நேற்று நள்ளிரவு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அமைப்பாளரான எஸ்.ஏ.ராபீல், இன்று அதிகாலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தர் எம்.ரி.எம் ஹுசைன் ஆகியோரது வீடுகளின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல்களின் போது, அவற்றின் முன் பகுதிகள் சேதமடைந்துள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படும் நபர்களே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. எனினும் சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனப் பொலிசார் தெரிவ்சித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010