இங்கிலாந்து பிரதமர் இல்லத்தில் முதன்முறையாக தீபாவளி கொண்டாட்டம்

நேற்று மாலை லண்டனில் உள்ள 10, டவுனிங் தெருவில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இக்கொண்டாட்டத்தின்போது வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பிரதமர் கோர்டான் பிரவுன் குத்துவிளக்கேற்றினார்.
'இதுவொரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி. இனி வருடந்தோறும் பிரதமர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடப்படும்' என்று கோர்டான் பிரவுன் குறிப்பிட்டார்.
அப்போது இந்தியர்கள் சார்பில் இங்கிலாந்து பிரதமருக்கு வடக்கு லண்டனில் உள்ள சுவாமி நாராயண் கோயிலின் உருவப் பொம்மை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், இந்தியத் தூதர் நளின் சூரி, லண்டன் வாழ் இந்தியத் தொழிலதிபர் சுவராஜ் பால், ஓவியர் எம்.எஃப். ஹூசைன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக