விசா கோரும் நடைமுறையில் மாற்றம் : பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம்

பிரித்தானியாவுக்கு மாணவர் விசா கோரும் நடைமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அந்நாட்டு உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இதன்படி, இன்றைய தினம் முதல் மாணவர் விசா கோரி விண்ணப்பம் செய்வோர் பிரித்தானிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சட்ட விதிகளுக்கு அமைவான முறையில் விண்ணப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விண்ணப்பம் கோருவோரது நிதி நிலைமை குறித்த விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விசா கோருவதற்குக் குறைந்தபட்சம் 28 தினங்களுக்கு முன்னர் இருந்தே கணக்கு மீதியைப் பேண வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் கோரும் நபர், பெற்றோர் அல்லது சட்ட ரீதியான பாதுகாவலரின் கணக்கில் போதியளவு நிதி காணப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 28 தினங்களுக்கு கணக்கு மீதியை பேணாத விண்ணப்பதாரிகளுக்கு விசா வழங்கப்பட மாட்டாது என வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
www.ukvisas.gov.uk என்ற இணைய தளத்தின் மூலம் மேலதிக விபரங்களைக் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக