அவுஸ்திரிலியாவிற்கு இலங்கை தமிழ் அகதிகள் அனுப்பப்பட்டு இந்தோனேசியாவில் பிடிபட்ட கப்பல் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்..

மலேசியாவில் இருந்து செயற்படும் புலி உறுப்பினர்களால் கடந்த வாரம் மலேசியாவில் இருந்து அவுஸ்திரிலியாவிற்கு இலங்கை தமிழ் அகதிகள் அனுப்பப்பட்டு இந்தோனேசியாவில் பிடிபட்ட கப்பல் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளன புலிகளின் மறைந்த தலைவர் வே. பிரபாகரனின் நேரடி கண்கானிப்பின் கீழ் செயற்பட்ட புலிகளின் கப்பல்களுக்கு பொறுப்பான பிரித்தானியா பிரஜையான சங்கர் மற்றும் நோர்வே பிரஜையும் இலங்கை தமிழருமான ஸ்டிபன் ராஜா என்று அழைக்கபடும் சோதி மற்றும் ஜேர்மனிய பாபு பிரித்தானியாவில் வசிக்கும் புலிகளின் உறுப்பினரான மோகன் மற்றும் மலேசியாவில் உள்ள கண்ணன் மற்றும் டேனியல் புலிகளின் செயற்பாட்டாளாரும் மலேசியாவில் வசிப்பவருமான ரொனால்ட் அல்லது சுகு இந்தோனிசியாவில் உள்ள பாபு மற்றும் மதி ஆகியோர் இக்கப்பல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. மோகன் தற்போது இந்தோனிசியாவில் பதுங்கியுள்ளதாக தெரிய வருகிறது ஏனையோர் மலேசியாவில் வசித்து வருவதாகவும் இதில் ரொனால்ட் அல்லது சுகு என்பவர் சர்வேதேசரீதியாக புலிகளின் பணத்தினை கையாள்பவர் எனவும் இவர் மலேசியாவில் ஆடம்பர மாளிகை ஒன்றில் புலிகளின் பணத்தில் வாழ்ந்து வருபவர் எனவும் மலோசியாவில் அதிவிலைகூடிய பெறுமதிமிக்க வாகனத்தில் வலம் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கபடுகிறது.
இதில் சோதியும் ரொனால்ட் அல்லது சுகு வன்னிமுகாமில் உள்ள புலி உறுப்பினர்களை அவுஸ்திரேலியாவிற்க்கு அனுப்புவதற்க்கு கப்பல் வாங்க வேண்டும் என கனடாவில் மூன்று லட்சம் டொலர்களை சேகரித்து அதில் 35.000 டொலர்களுக்கு பாவனைக்கு உதவாத படகு ஒன்றினை வாங்கி அதில் 30 புலிஉறுப்பினர்களையும் அத்தோடு ஏனைய 230பேரிடம் 15.000 டொலர்கள் வீதம் பெற்றுக் கொண்டு அப்படகில் அனுப்பி வைத்த படகை தற்போது இந்தோனிசியா கடற்படையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடதக்கது. இதன் ஊடாக அம்மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொள்ளாது செயற்பட்டதன் மூலம் அம்மக்களை பலிகொடுக்கவும் துணிந்துள்ளனர்.
ரொனாலட் சோதி போன்றோர் மலேசியாவில் பயங்கரவாத பாதளாகுழுக்கள் போன்று செயற்படுவதாகவும் மலேசியாவிக்கு செல்லுகின்ற தமிழ் செல்வந்தர்கள் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களை கடத்தியும் மிரட்டியும் பணம்பெறும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தெரிய வருகிறது அண்மையில் தமிழ் வர்த்தகர் ஒருவரின் மகனை கடத்தி மூன்று மில்லியன் டொலர்களை வழங்கியபின் அவர் விடுவிக்கபட்ட சம்பவமும் குறிப்பிடதக்கது.
இக்குழுவினர் சட்டத்திற்கு முரணான வகையில் புலிகளின் பெயரை அல்லது தமிழ் மக்களின் பெயரை பயன்படுத்தி பலகோடி டாலர்களை கொள்ளைலாபமாக பெற்று வருகின்ற போதிலும் அப்பணத்தினை பாதிக்கப்பட்ட புலிஉறுப்பினர்களின் குடும்பத்தினருக்கோ அல்லது போராட்டத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கோ செலவழிப்பதுமில்லை மாறாக தாங்களின் தனிப்பட்ட உல்லாச வாழக்கைக்கே செலவழிக்கபடுகிறது என்பதும் குறிப்பிடதக்கது இவர்களின் நிழற்படங்களை இணையதளம் வெகுவிரைவில் வெளியிட உள்ளது.
நன்றி.. ரிபிசி வானொலி செய்திப் பிரிவு –லண்டன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக