JKR. Blogger இயக்குவது.

சனி, 31 அக்டோபர், 2009

புகலிடம் கோருவோரை அழைத்துச் செல்ல அவுஸ்திரேலியாவுக்கு ஒருவார காலக்கெடு- இந்தோனேசியா அறிவிப்பு


இந்தோனேசிய கடற்பரப்பிலுள்ள 78 இலங்கை அகதிகளை அங்கிருந்து அழைத்துச் செல்ல இந்தோனேசியா, அவுஸ்திரேலியாவுக்கு ஒருவாரகால அவகாசம் வழங்கியுள்ளது என்று இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய சுங்கக் கப்பல் ஒன்றினால் காப்பாற்றப்பட்ட மேற்படி அகதிகளின் விவகாரத்தினால்,ஆட்சிக்கு வந்து ஒரு வருடமே பூர்த்தி அடைந்த அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் மீது அரசியல் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல முடியாதென அவுஸ்திரேலியா கடந்த புதன்கிழமை வலியுறுத்திக் கூறியது. விசாரணைக்காக அகதிகள் இந்தோனேசியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அது தொடர்பில் இந்தோனேசியாவுடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, இந்தோனேசியாவின் றியாவ் தீவிற்கு அருகில் அகதிகளுடன் சென்றுள்ள அவுஸ்திரேலிய ஓசானிக் வைக்கிங் கப்பல் நவம்பர் மாதம் 6ஆம் திகதி மட்டுமே அங்கு தரித்து நிற்க அனுமதிக்கப்படும் என்று இந்தோனேசிய வெளிநாட்டமைச்சு பேச்சாளர் ரேகு பெஸாஸயா நேற்று தெரிவித்துள்ளார். இந்த காலக்கெடுவுக்குள் அவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் அல்லது இந்தோனேசிய கடற்பரப்பிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தோனேசிய வெளிநாட்டமைச்சர் மார்டி நதலேகாவா வியாழக்கிழமை ராய்ட்டர் செய்தி சேவைக்கு அளித்த பேட்டி ஒன்றில், இலங்கைத் தமிழ் அகதிகளை என்ன செய்வது என்பதை தீர்மானிப்பது அவுஸ்திரேலியாவை பொறுத்தவிடயம் என சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010