JKR. Blogger இயக்குவது.

செய்தியறிக்கை


ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

ஆப்கானில் அமெரிக்காவுக்கு பெரும் இழப்பு

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள தளம் ஒன்றின் மீது புதனன்று பிற்பகல் நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலில், அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய இழப்பை எதிர்கொண்டதாக தெரியவந்துள்ளது.

கோஸ்ட் மாகாணத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் முழு நேரமாகவோ, அல்லது ஒப்பந்த அடிப்படையிலோ சி.ஐ.ஏவுக்காக பணியாற்றிய 8 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் 6 அமெரிக்கர்கள் இதில் காயமடைந்தனர்.

ஆப்கானிய இராணுவ அதிகாரியாக பணியாற்றிய தமது ஆளே அந்த தாக்குதலை நடத்தியதாக தலிபான்கள் கூறியுள்ளனர்.

பல சோதனைச் சாவடிகளின் ஊடாக கடந்து சென்று, அந்த நபர் உடற்பயிற்சி நிலையத்தில் அந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


இராக்கில் கடத்தப்பட்ட பிரித்தானியர்கள் தொடர்பில் குழப்பமான தகவல்கள்

இராக்கிய அரசாங்க அமைச்சில் இருந்து 2007 ஆம் ஆண்டில் 5 பிரிட்டிஷ்காரர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் இரானிய தொடர்பு குறித்து குழப்பமான தகவல்கள் வந்திருக்கின்றன.

இரானிய புரட்சிகர இராணுவத்தின் உத்தரவின் பேரில் அவர்களை தாம் கடத்தி வந்து இரானில் தடுத்து வைத்ததாக அந்த இரானிய புரட்சிகர இராணுவத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரை ஆதாரம் காட்டி பிரிட்டிஷ் செய்தித்தாளான ''த கார்டியன்'' செய்தி வெளியிட்டுள்ளது.

பீட்டர் மூர்
பீட்டர் மூர்

ஆனால், அவர்களை விடுதலை செய்வதற்கான சமரச பேச்சுவார்த்தைகளில் உதவிய இராக்கிய அரசியல்வாதி ஒருவர் இரானுக்கு இந்த கடத்தல் விவகாரத்தில் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்று கூறியுள்ளார்.

இந்த ஐவரில் ஒருவரான பீட்டர் மூர் என்னும் கணினி நிபுணர் எதிர்பாராத வகையில் புதனன்று விடுதலை செய்யப்பட்டார்.

இவரது மூன்று மெய்ப்பாதுகாவலர்கள் கடத்தி வைக்கப்பட்டிருந்தபோது கொல்லப்பட்டு விட்டார்கள். நான்காவது நபரும் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.


பின்லாந்த் தாக்குதல்தாரி தற்கொலை

பின்லாந்தின் தலைநகரான ஹெல்சிங்கிக்கு வெளியே எஸ்போவில் 5 பேரைச் சுட்டுக்கொன்ற ஒரு ஆயுதபாணி தானும் தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

ஒரு அங்காடியில் இவர் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

இப்ராஹிம் ஸ்குபொல்லி
இப்ராஹிம் ஸ்குபொல்லி

அருகில் உள்ள ஒரு அடுக்குமாடிக்கட்டிடத்தில் ஐந்தாவது சடலத்தை பொலிஸார் பின்னர் மீட்டனர்.

அந்த அங்காடியில் வேலைபார்த்துவந்த அந்தப் பெண், அந்த துப்பாக்கிதாரியின் முன்னாள் தோழி என்று நம்பப்படுகின்றது.

அவர்தான் அந்த துப்பாக்கிதாரியின் முக்கிய இலக்கும் என்று பொலிஸார் விபரித்துள்ளனர்.

ஆயுதபாணியின் சடலம் மற்றுமொரு அடுக்குமாடி கட்டிடத்தில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

ஏற்கனவே குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ள அந்த நபர் 43 வயதான இப்ராஹிம் சுக்பொலி என அடையாளம் காணப்பட்டார்.

2007 மற்றும் 2008 இல் நடந்த பரவலான சூட்டுச் சம்பவங்களை அடுத்து துப்பாக்கிக்கான உரிம நிபந்தனைகளை பின்லாந்து பொலிஸார் கடுமையாக்கியயுள்ளனர்.


கடவுளை குறிக்க அல்லா என்கிற வார்த்தையை பயன்படுத்தலாம் மலேஷியா நீதிமன்றம் தீர்ப்பு

கடவுளைக் குறிக்கின்ற போது அல்லா என்ற சொல்லைபயன்படுத்த கிறிஸ்தவர்களுக்கு அரசியலமைப்பு அடிப்படையிலான உரிமை இருக்கிறது என்று மலேசிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முஸ்லிம்கள் அல்லாதவர்கள் இந்த சொல்லை பயன்படுத்துவதற்கான அரசாங்கத் தடையை இந்த தீர்ப்பு நிராகரிக்கிறது.

மலேஷியாவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினர்
மலேஷியாவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினர்

இது தொடர்பான வழக்கு றோமன் கத்தோலிக்க வார சஞ்சிகையான ஹெரோல்டினால் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இனத்தாலும், மதத்தாலும் பிரிக்கப்படாமல், ஒன்றுபட்ட மலேசியாவை விரும்பும் அனைவருக்கும் இது ஒரு வெற்றி என்று இந்த சஞ்சிகையின் ஆசிரியர் லோரண்ஸ் அண்ட்ரூ பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க திருச்சபை முஸ்லிம் மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறுவதை ஊக்குவிக்கின்றது என்று அங்குள்ள முஸ்லிம் குழுக்கள் சந்தேகிப்பதாக பிபிசியின் கோலாலம்பூர் நிருபர் கூறுகிறார்.

இத்தகைய மதமாற்ற நகர்வு மலேசியாவில் சட்ட விரோதமானதாகும்.

செய்தியரங்கம்
பாபா அணுசக்தி ஆய்வு மையம்
பாபா அணுசக்தி ஆய்வு மையம்

பாபா அணு ஆய்வக விபத்து- விடை தேடும் கேள்விகள்

இந்திய அணு சக்தித் துறையின் முக்கிய ஆய்வகங்கள் பல உள்ள மும்பை பாபா அணு ஆய்வு நிலைய வளாகத்துக்குள் இருந்த ஒரு சோதனைச் சாலையில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து ஏன் ஏற்பட்டது, அங்கே பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என்பது குறித்த உண்மையான தகவல்களை வெளியிட இந்திய அணு ஆராய்ச்சிக் கழகம் மறுப்பதாக விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அவர்களின் சந்தேகங்கள் குறித்தும், இந்திய அணு சக்தி ஆய்வ கங்களில் நடக்கும் விபத்துக்கள் குறித்த விவரங்களை வெளியி டுவதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் போதுமான வெளிப்படைத் தன்மையை கடைபிடிப்பதில்லை என்கிற புகார் குறித்தும் இந்திய அணுசக்தித்துறையின் முன்னாள் தலைவர் எம் ஆர் சீனிவாசன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை அரசு என்னை சித்திரவதை செய்யவில்லை—மருத்துவர் சிவபாலன்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் செயல்பட்ட மருத்துவமனைகளில் பணியாற்றிய நான்கு அரச மருத்துவர்களும் அவர்களோடு சேர்ந்து மருத்துவ சேவையாற்றி வந்த சிவபாலன் என்ற மருத்துவரும் போரின் இறுதி நாட்களில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த போது கைது செய்யப்பட்டனர்.

அரச மருத்துவர்கள் நான்கு பேரும் அக்டோபர் மாதம் விடுவிக்கப் பட்டாலும், மருத்துவர் சிவபாலன் தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த திங்களன்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சிவபாலன், நிர்வாக நடைமுறைகளை முடித்துக் கொண்டு புதன்கிழமை இரவு வீடு திரும்புயுள்ளார்.

தாம் கைது செய்யப்பட்டது குறித்தும், காவலில் இருந்தபோது தாம் நடத்தப்பட்ட விதம் குறித்தும் தமிழோசைக்கு அவர் அளித்த பிரத்யேக செவ்வியில் விவரித்தார்.

காவலில் இருந்தபோது தாம் சித்திரவதை செய்யப்படவில்லை என்றும், தற்போது தாம் ஒருலட்ச ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் மாதம் ஒரு முறை காவல்துறையிடம் சென்று தான் கையொப்பமிடவேண்டும் என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் அந்த செவ்வியில் தெரிவித்தார். அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு வலுக்கிறது

வட சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு பொது மருத்துவ மனையில் நடைபெற்ற படப்பிடிப்பு காரணமாக அந்த மருத்துவ மனைக்கு வந்த நோயாளர்கள் பெரும் இன்னல்களை சந்தித்ததாக செய்திகள் வெளியான நிலையில், இனி ஸ்டான்லி மருத்துவ மனையில் படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டாம் என்று சம்மந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருக்கும் அரசு கட்டிடங்கள், பூங்காக்கள், சாலை கள் உள்ளிட்ட பொது இடங்கள் மற்றும் கோவில்களில் திரைப்பட படப்பிடிப்பு நடத்துவதற்கு கட்டண அடிப்படையில் தமிழக அரசு அனுமதி அளிக்கிறது.

தமிழ்திரைப்பட படப்பிடிப்புக்கு எதிர்ப்பு
தமிழ் திரைப்பட படப்பிடிப்புக்கு எதிர்ப்பு

ஆனால் இத்தகைய படப்பிடிப்புகள் நடக்கும்போது குறிப்பிட்ட அந்த பகுதியை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு கடும் அசவுகரியங்களை உண்டாக்குவதாக தொடர்ந்து புகார்கள் வெளியாகிவருகின்றன.

ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்த இத்தகைய திரைப்பட படப்பிடிப்பு அங்கு சென்ற நோயாளர்களுக்கு கடும் அசவுகரியங் களை உண்டாக்கியதாக ஊடக செய்திகள் தெரிவித்தன.

இதையடுத்து ஸ்டான்லி மருத்துவ நிர்வாகம், இனிமேல் மருத்துவமனை வளாகத்தில் திரைப்பட படப்பிடிப்புக்களை அனுமதிக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


Ler Mais

செய்தியறிக்கை


ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

ஆப்கானில் அமெரிக்காவுக்கு பெரும் இழப்பு

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள தளம் ஒன்றின் மீது புதனன்று பிற்பகல் நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலில், அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய இழப்பை எதிர்கொண்டதாக தெரியவந்துள்ளது.

கோஸ்ட் மாகாணத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் முழு நேரமாகவோ, அல்லது ஒப்பந்த அடிப்படையிலோ சி.ஐ.ஏவுக்காக பணியாற்றிய 8 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் 6 அமெரிக்கர்கள் இதில் காயமடைந்தனர்.

ஆப்கானிய இராணுவ அதிகாரியாக பணியாற்றிய தமது ஆளே அந்த தாக்குதலை நடத்தியதாக தலிபான்கள் கூறியுள்ளனர்.

பல சோதனைச் சாவடிகளின் ஊடாக கடந்து சென்று, அந்த நபர் உடற்பயிற்சி நிலையத்தில் அந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


இராக்கில் கடத்தப்பட்ட பிரித்தானியர்கள் தொடர்பில் குழப்பமான தகவல்கள்

இராக்கிய அரசாங்க அமைச்சில் இருந்து 2007 ஆம் ஆண்டில் 5 பிரிட்டிஷ்காரர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் இரானிய தொடர்பு குறித்து குழப்பமான தகவல்கள் வந்திருக்கின்றன.

இரானிய புரட்சிகர இராணுவத்தின் உத்தரவின் பேரில் அவர்களை தாம் கடத்தி வந்து இரானில் தடுத்து வைத்ததாக அந்த இரானிய புரட்சிகர இராணுவத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரை ஆதாரம் காட்டி பிரிட்டிஷ் செய்தித்தாளான ''த கார்டியன்'' செய்தி வெளியிட்டுள்ளது.

பீட்டர் மூர்
பீட்டர் மூர்

ஆனால், அவர்களை விடுதலை செய்வதற்கான சமரச பேச்சுவார்த்தைகளில் உதவிய இராக்கிய அரசியல்வாதி ஒருவர் இரானுக்கு இந்த கடத்தல் விவகாரத்தில் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்று கூறியுள்ளார்.

இந்த ஐவரில் ஒருவரான பீட்டர் மூர் என்னும் கணினி நிபுணர் எதிர்பாராத வகையில் புதனன்று விடுதலை செய்யப்பட்டார்.

இவரது மூன்று மெய்ப்பாதுகாவலர்கள் கடத்தி வைக்கப்பட்டிருந்தபோது கொல்லப்பட்டு விட்டார்கள். நான்காவது நபரும் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.


பின்லாந்த் தாக்குதல்தாரி தற்கொலை

பின்லாந்தின் தலைநகரான ஹெல்சிங்கிக்கு வெளியே எஸ்போவில் 5 பேரைச் சுட்டுக்கொன்ற ஒரு ஆயுதபாணி தானும் தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

ஒரு அங்காடியில் இவர் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

இப்ராஹிம் ஸ்குபொல்லி
இப்ராஹிம் ஸ்குபொல்லி

அருகில் உள்ள ஒரு அடுக்குமாடிக்கட்டிடத்தில் ஐந்தாவது சடலத்தை பொலிஸார் பின்னர் மீட்டனர்.

அந்த அங்காடியில் வேலைபார்த்துவந்த அந்தப் பெண், அந்த துப்பாக்கிதாரியின் முன்னாள் தோழி என்று நம்பப்படுகின்றது.

அவர்தான் அந்த துப்பாக்கிதாரியின் முக்கிய இலக்கும் என்று பொலிஸார் விபரித்துள்ளனர்.

ஆயுதபாணியின் சடலம் மற்றுமொரு அடுக்குமாடி கட்டிடத்தில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

ஏற்கனவே குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ள அந்த நபர் 43 வயதான இப்ராஹிம் சுக்பொலி என அடையாளம் காணப்பட்டார்.

2007 மற்றும் 2008 இல் நடந்த பரவலான சூட்டுச் சம்பவங்களை அடுத்து துப்பாக்கிக்கான உரிம நிபந்தனைகளை பின்லாந்து பொலிஸார் கடுமையாக்கியயுள்ளனர்.


கடவுளை குறிக்க அல்லா என்கிற வார்த்தையை பயன்படுத்தலாம் மலேஷியா நீதிமன்றம் தீர்ப்பு

கடவுளைக் குறிக்கின்ற போது அல்லா என்ற சொல்லைபயன்படுத்த கிறிஸ்தவர்களுக்கு அரசியலமைப்பு அடிப்படையிலான உரிமை இருக்கிறது என்று மலேசிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முஸ்லிம்கள் அல்லாதவர்கள் இந்த சொல்லை பயன்படுத்துவதற்கான அரசாங்கத் தடையை இந்த தீர்ப்பு நிராகரிக்கிறது.

மலேஷியாவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினர்
மலேஷியாவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினர்

இது தொடர்பான வழக்கு றோமன் கத்தோலிக்க வார சஞ்சிகையான ஹெரோல்டினால் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இனத்தாலும், மதத்தாலும் பிரிக்கப்படாமல், ஒன்றுபட்ட மலேசியாவை விரும்பும் அனைவருக்கும் இது ஒரு வெற்றி என்று இந்த சஞ்சிகையின் ஆசிரியர் லோரண்ஸ் அண்ட்ரூ பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க திருச்சபை முஸ்லிம் மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறுவதை ஊக்குவிக்கின்றது என்று அங்குள்ள முஸ்லிம் குழுக்கள் சந்தேகிப்பதாக பிபிசியின் கோலாலம்பூர் நிருபர் கூறுகிறார்.

இத்தகைய மதமாற்ற நகர்வு மலேசியாவில் சட்ட விரோதமானதாகும்.

செய்தியரங்கம்
பாபா அணுசக்தி ஆய்வு மையம்
பாபா அணுசக்தி ஆய்வு மையம்

பாபா அணு ஆய்வக விபத்து- விடை தேடும் கேள்விகள்

இந்திய அணு சக்தித் துறையின் முக்கிய ஆய்வகங்கள் பல உள்ள மும்பை பாபா அணு ஆய்வு நிலைய வளாகத்துக்குள் இருந்த ஒரு சோதனைச் சாலையில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து ஏன் ஏற்பட்டது, அங்கே பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என்பது குறித்த உண்மையான தகவல்களை வெளியிட இந்திய அணு ஆராய்ச்சிக் கழகம் மறுப்பதாக விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அவர்களின் சந்தேகங்கள் குறித்தும், இந்திய அணு சக்தி ஆய்வ கங்களில் நடக்கும் விபத்துக்கள் குறித்த விவரங்களை வெளியி டுவதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் போதுமான வெளிப்படைத் தன்மையை கடைபிடிப்பதில்லை என்கிற புகார் குறித்தும் இந்திய அணுசக்தித்துறையின் முன்னாள் தலைவர் எம் ஆர் சீனிவாசன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை அரசு என்னை சித்திரவதை செய்யவில்லை—மருத்துவர் சிவபாலன்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் செயல்பட்ட மருத்துவமனைகளில் பணியாற்றிய நான்கு அரச மருத்துவர்களும் அவர்களோடு சேர்ந்து மருத்துவ சேவையாற்றி வந்த சிவபாலன் என்ற மருத்துவரும் போரின் இறுதி நாட்களில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த போது கைது செய்யப்பட்டனர்.

அரச மருத்துவர்கள் நான்கு பேரும் அக்டோபர் மாதம் விடுவிக்கப் பட்டாலும், மருத்துவர் சிவபாலன் தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த திங்களன்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சிவபாலன், நிர்வாக நடைமுறைகளை முடித்துக் கொண்டு புதன்கிழமை இரவு வீடு திரும்புயுள்ளார்.

தாம் கைது செய்யப்பட்டது குறித்தும், காவலில் இருந்தபோது தாம் நடத்தப்பட்ட விதம் குறித்தும் தமிழோசைக்கு அவர் அளித்த பிரத்யேக செவ்வியில் விவரித்தார்.

காவலில் இருந்தபோது தாம் சித்திரவதை செய்யப்படவில்லை என்றும், தற்போது தாம் ஒருலட்ச ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் மாதம் ஒரு முறை காவல்துறையிடம் சென்று தான் கையொப்பமிடவேண்டும் என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் அந்த செவ்வியில் தெரிவித்தார். அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு வலுக்கிறது

வட சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு பொது மருத்துவ மனையில் நடைபெற்ற படப்பிடிப்பு காரணமாக அந்த மருத்துவ மனைக்கு வந்த நோயாளர்கள் பெரும் இன்னல்களை சந்தித்ததாக செய்திகள் வெளியான நிலையில், இனி ஸ்டான்லி மருத்துவ மனையில் படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டாம் என்று சம்மந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருக்கும் அரசு கட்டிடங்கள், பூங்காக்கள், சாலை கள் உள்ளிட்ட பொது இடங்கள் மற்றும் கோவில்களில் திரைப்பட படப்பிடிப்பு நடத்துவதற்கு கட்டண அடிப்படையில் தமிழக அரசு அனுமதி அளிக்கிறது.

தமிழ்திரைப்பட படப்பிடிப்புக்கு எதிர்ப்பு
தமிழ் திரைப்பட படப்பிடிப்புக்கு எதிர்ப்பு

ஆனால் இத்தகைய படப்பிடிப்புகள் நடக்கும்போது குறிப்பிட்ட அந்த பகுதியை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு கடும் அசவுகரியங்களை உண்டாக்குவதாக தொடர்ந்து புகார்கள் வெளியாகிவருகின்றன.

ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்த இத்தகைய திரைப்பட படப்பிடிப்பு அங்கு சென்ற நோயாளர்களுக்கு கடும் அசவுகரியங் களை உண்டாக்கியதாக ஊடக செய்திகள் தெரிவித்தன.

இதையடுத்து ஸ்டான்லி மருத்துவ நிர்வாகம், இனிமேல் மருத்துவமனை வளாகத்தில் திரைப்பட படப்பிடிப்புக்களை அனுமதிக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


Ler Mais

செய்தியறிக்கை


ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

ஆப்கானில் அமெரிக்காவுக்கு பெரும் இழப்பு

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள தளம் ஒன்றின் மீது புதனன்று பிற்பகல் நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலில், அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய இழப்பை எதிர்கொண்டதாக தெரியவந்துள்ளது.

கோஸ்ட் மாகாணத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் முழு நேரமாகவோ, அல்லது ஒப்பந்த அடிப்படையிலோ சி.ஐ.ஏவுக்காக பணியாற்றிய 8 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் 6 அமெரிக்கர்கள் இதில் காயமடைந்தனர்.

ஆப்கானிய இராணுவ அதிகாரியாக பணியாற்றிய தமது ஆளே அந்த தாக்குதலை நடத்தியதாக தலிபான்கள் கூறியுள்ளனர்.

பல சோதனைச் சாவடிகளின் ஊடாக கடந்து சென்று, அந்த நபர் உடற்பயிற்சி நிலையத்தில் அந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


இராக்கில் கடத்தப்பட்ட பிரித்தானியர்கள் தொடர்பில் குழப்பமான தகவல்கள்

இராக்கிய அரசாங்க அமைச்சில் இருந்து 2007 ஆம் ஆண்டில் 5 பிரிட்டிஷ்காரர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் இரானிய தொடர்பு குறித்து குழப்பமான தகவல்கள் வந்திருக்கின்றன.

இரானிய புரட்சிகர இராணுவத்தின் உத்தரவின் பேரில் அவர்களை தாம் கடத்தி வந்து இரானில் தடுத்து வைத்ததாக அந்த இரானிய புரட்சிகர இராணுவத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரை ஆதாரம் காட்டி பிரிட்டிஷ் செய்தித்தாளான ''த கார்டியன்'' செய்தி வெளியிட்டுள்ளது.

பீட்டர் மூர்
பீட்டர் மூர்

ஆனால், அவர்களை விடுதலை செய்வதற்கான சமரச பேச்சுவார்த்தைகளில் உதவிய இராக்கிய அரசியல்வாதி ஒருவர் இரானுக்கு இந்த கடத்தல் விவகாரத்தில் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்று கூறியுள்ளார்.

இந்த ஐவரில் ஒருவரான பீட்டர் மூர் என்னும் கணினி நிபுணர் எதிர்பாராத வகையில் புதனன்று விடுதலை செய்யப்பட்டார்.

இவரது மூன்று மெய்ப்பாதுகாவலர்கள் கடத்தி வைக்கப்பட்டிருந்தபோது கொல்லப்பட்டு விட்டார்கள். நான்காவது நபரும் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.


பின்லாந்த் தாக்குதல்தாரி தற்கொலை

பின்லாந்தின் தலைநகரான ஹெல்சிங்கிக்கு வெளியே எஸ்போவில் 5 பேரைச் சுட்டுக்கொன்ற ஒரு ஆயுதபாணி தானும் தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

ஒரு அங்காடியில் இவர் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

இப்ராஹிம் ஸ்குபொல்லி
இப்ராஹிம் ஸ்குபொல்லி

அருகில் உள்ள ஒரு அடுக்குமாடிக்கட்டிடத்தில் ஐந்தாவது சடலத்தை பொலிஸார் பின்னர் மீட்டனர்.

அந்த அங்காடியில் வேலைபார்த்துவந்த அந்தப் பெண், அந்த துப்பாக்கிதாரியின் முன்னாள் தோழி என்று நம்பப்படுகின்றது.

அவர்தான் அந்த துப்பாக்கிதாரியின் முக்கிய இலக்கும் என்று பொலிஸார் விபரித்துள்ளனர்.

ஆயுதபாணியின் சடலம் மற்றுமொரு அடுக்குமாடி கட்டிடத்தில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

ஏற்கனவே குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ள அந்த நபர் 43 வயதான இப்ராஹிம் சுக்பொலி என அடையாளம் காணப்பட்டார்.

2007 மற்றும் 2008 இல் நடந்த பரவலான சூட்டுச் சம்பவங்களை அடுத்து துப்பாக்கிக்கான உரிம நிபந்தனைகளை பின்லாந்து பொலிஸார் கடுமையாக்கியயுள்ளனர்.


கடவுளை குறிக்க அல்லா என்கிற வார்த்தையை பயன்படுத்தலாம் மலேஷியா நீதிமன்றம் தீர்ப்பு

கடவுளைக் குறிக்கின்ற போது அல்லா என்ற சொல்லைபயன்படுத்த கிறிஸ்தவர்களுக்கு அரசியலமைப்பு அடிப்படையிலான உரிமை இருக்கிறது என்று மலேசிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முஸ்லிம்கள் அல்லாதவர்கள் இந்த சொல்லை பயன்படுத்துவதற்கான அரசாங்கத் தடையை இந்த தீர்ப்பு நிராகரிக்கிறது.

மலேஷியாவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினர்
மலேஷியாவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினர்

இது தொடர்பான வழக்கு றோமன் கத்தோலிக்க வார சஞ்சிகையான ஹெரோல்டினால் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இனத்தாலும், மதத்தாலும் பிரிக்கப்படாமல், ஒன்றுபட்ட மலேசியாவை விரும்பும் அனைவருக்கும் இது ஒரு வெற்றி என்று இந்த சஞ்சிகையின் ஆசிரியர் லோரண்ஸ் அண்ட்ரூ பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க திருச்சபை முஸ்லிம் மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறுவதை ஊக்குவிக்கின்றது என்று அங்குள்ள முஸ்லிம் குழுக்கள் சந்தேகிப்பதாக பிபிசியின் கோலாலம்பூர் நிருபர் கூறுகிறார்.

இத்தகைய மதமாற்ற நகர்வு மலேசியாவில் சட்ட விரோதமானதாகும்.

செய்தியரங்கம்
பாபா அணுசக்தி ஆய்வு மையம்
பாபா அணுசக்தி ஆய்வு மையம்

பாபா அணு ஆய்வக விபத்து- விடை தேடும் கேள்விகள்

இந்திய அணு சக்தித் துறையின் முக்கிய ஆய்வகங்கள் பல உள்ள மும்பை பாபா அணு ஆய்வு நிலைய வளாகத்துக்குள் இருந்த ஒரு சோதனைச் சாலையில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து ஏன் ஏற்பட்டது, அங்கே பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என்பது குறித்த உண்மையான தகவல்களை வெளியிட இந்திய அணு ஆராய்ச்சிக் கழகம் மறுப்பதாக விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அவர்களின் சந்தேகங்கள் குறித்தும், இந்திய அணு சக்தி ஆய்வ கங்களில் நடக்கும் விபத்துக்கள் குறித்த விவரங்களை வெளியி டுவதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் போதுமான வெளிப்படைத் தன்மையை கடைபிடிப்பதில்லை என்கிற புகார் குறித்தும் இந்திய அணுசக்தித்துறையின் முன்னாள் தலைவர் எம் ஆர் சீனிவாசன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை அரசு என்னை சித்திரவதை செய்யவில்லை—மருத்துவர் சிவபாலன்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் செயல்பட்ட மருத்துவமனைகளில் பணியாற்றிய நான்கு அரச மருத்துவர்களும் அவர்களோடு சேர்ந்து மருத்துவ சேவையாற்றி வந்த சிவபாலன் என்ற மருத்துவரும் போரின் இறுதி நாட்களில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த போது கைது செய்யப்பட்டனர்.

அரச மருத்துவர்கள் நான்கு பேரும் அக்டோபர் மாதம் விடுவிக்கப் பட்டாலும், மருத்துவர் சிவபாலன் தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த திங்களன்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சிவபாலன், நிர்வாக நடைமுறைகளை முடித்துக் கொண்டு புதன்கிழமை இரவு வீடு திரும்புயுள்ளார்.

தாம் கைது செய்யப்பட்டது குறித்தும், காவலில் இருந்தபோது தாம் நடத்தப்பட்ட விதம் குறித்தும் தமிழோசைக்கு அவர் அளித்த பிரத்யேக செவ்வியில் விவரித்தார்.

காவலில் இருந்தபோது தாம் சித்திரவதை செய்யப்படவில்லை என்றும், தற்போது தாம் ஒருலட்ச ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் மாதம் ஒரு முறை காவல்துறையிடம் சென்று தான் கையொப்பமிடவேண்டும் என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் அந்த செவ்வியில் தெரிவித்தார். அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு வலுக்கிறது

வட சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு பொது மருத்துவ மனையில் நடைபெற்ற படப்பிடிப்பு காரணமாக அந்த மருத்துவ மனைக்கு வந்த நோயாளர்கள் பெரும் இன்னல்களை சந்தித்ததாக செய்திகள் வெளியான நிலையில், இனி ஸ்டான்லி மருத்துவ மனையில் படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டாம் என்று சம்மந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருக்கும் அரசு கட்டிடங்கள், பூங்காக்கள், சாலை கள் உள்ளிட்ட பொது இடங்கள் மற்றும் கோவில்களில் திரைப்பட படப்பிடிப்பு நடத்துவதற்கு கட்டண அடிப்படையில் தமிழக அரசு அனுமதி அளிக்கிறது.

தமிழ்திரைப்பட படப்பிடிப்புக்கு எதிர்ப்பு
தமிழ் திரைப்பட படப்பிடிப்புக்கு எதிர்ப்பு

ஆனால் இத்தகைய படப்பிடிப்புகள் நடக்கும்போது குறிப்பிட்ட அந்த பகுதியை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு கடும் அசவுகரியங்களை உண்டாக்குவதாக தொடர்ந்து புகார்கள் வெளியாகிவருகின்றன.

ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்த இத்தகைய திரைப்பட படப்பிடிப்பு அங்கு சென்ற நோயாளர்களுக்கு கடும் அசவுகரியங் களை உண்டாக்கியதாக ஊடக செய்திகள் தெரிவித்தன.

இதையடுத்து ஸ்டான்லி மருத்துவ நிர்வாகம், இனிமேல் மருத்துவமனை வளாகத்தில் திரைப்பட படப்பிடிப்புக்களை அனுமதிக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


Ler Mais

செய்தியறிக்கை


ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

ஆப்கானில் அமெரிக்காவுக்கு பெரும் இழப்பு

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள தளம் ஒன்றின் மீது புதனன்று பிற்பகல் நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலில், அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய இழப்பை எதிர்கொண்டதாக தெரியவந்துள்ளது.

கோஸ்ட் மாகாணத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் முழு நேரமாகவோ, அல்லது ஒப்பந்த அடிப்படையிலோ சி.ஐ.ஏவுக்காக பணியாற்றிய 8 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் 6 அமெரிக்கர்கள் இதில் காயமடைந்தனர்.

ஆப்கானிய இராணுவ அதிகாரியாக பணியாற்றிய தமது ஆளே அந்த தாக்குதலை நடத்தியதாக தலிபான்கள் கூறியுள்ளனர்.

பல சோதனைச் சாவடிகளின் ஊடாக கடந்து சென்று, அந்த நபர் உடற்பயிற்சி நிலையத்தில் அந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


இராக்கில் கடத்தப்பட்ட பிரித்தானியர்கள் தொடர்பில் குழப்பமான தகவல்கள்

இராக்கிய அரசாங்க அமைச்சில் இருந்து 2007 ஆம் ஆண்டில் 5 பிரிட்டிஷ்காரர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் இரானிய தொடர்பு குறித்து குழப்பமான தகவல்கள் வந்திருக்கின்றன.

இரானிய புரட்சிகர இராணுவத்தின் உத்தரவின் பேரில் அவர்களை தாம் கடத்தி வந்து இரானில் தடுத்து வைத்ததாக அந்த இரானிய புரட்சிகர இராணுவத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரை ஆதாரம் காட்டி பிரிட்டிஷ் செய்தித்தாளான ''த கார்டியன்'' செய்தி வெளியிட்டுள்ளது.

பீட்டர் மூர்
பீட்டர் மூர்

ஆனால், அவர்களை விடுதலை செய்வதற்கான சமரச பேச்சுவார்த்தைகளில் உதவிய இராக்கிய அரசியல்வாதி ஒருவர் இரானுக்கு இந்த கடத்தல் விவகாரத்தில் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்று கூறியுள்ளார்.

இந்த ஐவரில் ஒருவரான பீட்டர் மூர் என்னும் கணினி நிபுணர் எதிர்பாராத வகையில் புதனன்று விடுதலை செய்யப்பட்டார்.

இவரது மூன்று மெய்ப்பாதுகாவலர்கள் கடத்தி வைக்கப்பட்டிருந்தபோது கொல்லப்பட்டு விட்டார்கள். நான்காவது நபரும் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.


பின்லாந்த் தாக்குதல்தாரி தற்கொலை

பின்லாந்தின் தலைநகரான ஹெல்சிங்கிக்கு வெளியே எஸ்போவில் 5 பேரைச் சுட்டுக்கொன்ற ஒரு ஆயுதபாணி தானும் தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

ஒரு அங்காடியில் இவர் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

இப்ராஹிம் ஸ்குபொல்லி
இப்ராஹிம் ஸ்குபொல்லி

அருகில் உள்ள ஒரு அடுக்குமாடிக்கட்டிடத்தில் ஐந்தாவது சடலத்தை பொலிஸார் பின்னர் மீட்டனர்.

அந்த அங்காடியில் வேலைபார்த்துவந்த அந்தப் பெண், அந்த துப்பாக்கிதாரியின் முன்னாள் தோழி என்று நம்பப்படுகின்றது.

அவர்தான் அந்த துப்பாக்கிதாரியின் முக்கிய இலக்கும் என்று பொலிஸார் விபரித்துள்ளனர்.

ஆயுதபாணியின் சடலம் மற்றுமொரு அடுக்குமாடி கட்டிடத்தில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

ஏற்கனவே குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ள அந்த நபர் 43 வயதான இப்ராஹிம் சுக்பொலி என அடையாளம் காணப்பட்டார்.

2007 மற்றும் 2008 இல் நடந்த பரவலான சூட்டுச் சம்பவங்களை அடுத்து துப்பாக்கிக்கான உரிம நிபந்தனைகளை பின்லாந்து பொலிஸார் கடுமையாக்கியயுள்ளனர்.


கடவுளை குறிக்க அல்லா என்கிற வார்த்தையை பயன்படுத்தலாம் மலேஷியா நீதிமன்றம் தீர்ப்பு

கடவுளைக் குறிக்கின்ற போது அல்லா என்ற சொல்லைபயன்படுத்த கிறிஸ்தவர்களுக்கு அரசியலமைப்பு அடிப்படையிலான உரிமை இருக்கிறது என்று மலேசிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முஸ்லிம்கள் அல்லாதவர்கள் இந்த சொல்லை பயன்படுத்துவதற்கான அரசாங்கத் தடையை இந்த தீர்ப்பு நிராகரிக்கிறது.

மலேஷியாவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினர்
மலேஷியாவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினர்

இது தொடர்பான வழக்கு றோமன் கத்தோலிக்க வார சஞ்சிகையான ஹெரோல்டினால் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இனத்தாலும், மதத்தாலும் பிரிக்கப்படாமல், ஒன்றுபட்ட மலேசியாவை விரும்பும் அனைவருக்கும் இது ஒரு வெற்றி என்று இந்த சஞ்சிகையின் ஆசிரியர் லோரண்ஸ் அண்ட்ரூ பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க திருச்சபை முஸ்லிம் மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறுவதை ஊக்குவிக்கின்றது என்று அங்குள்ள முஸ்லிம் குழுக்கள் சந்தேகிப்பதாக பிபிசியின் கோலாலம்பூர் நிருபர் கூறுகிறார்.

இத்தகைய மதமாற்ற நகர்வு மலேசியாவில் சட்ட விரோதமானதாகும்.

செய்தியரங்கம்
பாபா அணுசக்தி ஆய்வு மையம்
பாபா அணுசக்தி ஆய்வு மையம்

பாபா அணு ஆய்வக விபத்து- விடை தேடும் கேள்விகள்

இந்திய அணு சக்தித் துறையின் முக்கிய ஆய்வகங்கள் பல உள்ள மும்பை பாபா அணு ஆய்வு நிலைய வளாகத்துக்குள் இருந்த ஒரு சோதனைச் சாலையில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து ஏன் ஏற்பட்டது, அங்கே பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என்பது குறித்த உண்மையான தகவல்களை வெளியிட இந்திய அணு ஆராய்ச்சிக் கழகம் மறுப்பதாக விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அவர்களின் சந்தேகங்கள் குறித்தும், இந்திய அணு சக்தி ஆய்வ கங்களில் நடக்கும் விபத்துக்கள் குறித்த விவரங்களை வெளியி டுவதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் போதுமான வெளிப்படைத் தன்மையை கடைபிடிப்பதில்லை என்கிற புகார் குறித்தும் இந்திய அணுசக்தித்துறையின் முன்னாள் தலைவர் எம் ஆர் சீனிவாசன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை அரசு என்னை சித்திரவதை செய்யவில்லை—மருத்துவர் சிவபாலன்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் செயல்பட்ட மருத்துவமனைகளில் பணியாற்றிய நான்கு அரச மருத்துவர்களும் அவர்களோடு சேர்ந்து மருத்துவ சேவையாற்றி வந்த சிவபாலன் என்ற மருத்துவரும் போரின் இறுதி நாட்களில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த போது கைது செய்யப்பட்டனர்.

அரச மருத்துவர்கள் நான்கு பேரும் அக்டோபர் மாதம் விடுவிக்கப் பட்டாலும், மருத்துவர் சிவபாலன் தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த திங்களன்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சிவபாலன், நிர்வாக நடைமுறைகளை முடித்துக் கொண்டு புதன்கிழமை இரவு வீடு திரும்புயுள்ளார்.

தாம் கைது செய்யப்பட்டது குறித்தும், காவலில் இருந்தபோது தாம் நடத்தப்பட்ட விதம் குறித்தும் தமிழோசைக்கு அவர் அளித்த பிரத்யேக செவ்வியில் விவரித்தார்.

காவலில் இருந்தபோது தாம் சித்திரவதை செய்யப்படவில்லை என்றும், தற்போது தாம் ஒருலட்ச ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் மாதம் ஒரு முறை காவல்துறையிடம் சென்று தான் கையொப்பமிடவேண்டும் என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் அந்த செவ்வியில் தெரிவித்தார். அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு வலுக்கிறது

வட சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு பொது மருத்துவ மனையில் நடைபெற்ற படப்பிடிப்பு காரணமாக அந்த மருத்துவ மனைக்கு வந்த நோயாளர்கள் பெரும் இன்னல்களை சந்தித்ததாக செய்திகள் வெளியான நிலையில், இனி ஸ்டான்லி மருத்துவ மனையில் படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டாம் என்று சம்மந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருக்கும் அரசு கட்டிடங்கள், பூங்காக்கள், சாலை கள் உள்ளிட்ட பொது இடங்கள் மற்றும் கோவில்களில் திரைப்பட படப்பிடிப்பு நடத்துவதற்கு கட்டண அடிப்படையில் தமிழக அரசு அனுமதி அளிக்கிறது.

தமிழ்திரைப்பட படப்பிடிப்புக்கு எதிர்ப்பு
தமிழ் திரைப்பட படப்பிடிப்புக்கு எதிர்ப்பு

ஆனால் இத்தகைய படப்பிடிப்புகள் நடக்கும்போது குறிப்பிட்ட அந்த பகுதியை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு கடும் அசவுகரியங்களை உண்டாக்குவதாக தொடர்ந்து புகார்கள் வெளியாகிவருகின்றன.

ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்த இத்தகைய திரைப்பட படப்பிடிப்பு அங்கு சென்ற நோயாளர்களுக்கு கடும் அசவுகரியங் களை உண்டாக்கியதாக ஊடக செய்திகள் தெரிவித்தன.

இதையடுத்து ஸ்டான்லி மருத்துவ நிர்வாகம், இனிமேல் மருத்துவமனை வளாகத்தில் திரைப்பட படப்பிடிப்புக்களை அனுமதிக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


Ler Mais
 
JKRTAMIL | by TNB ©2010