காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் புத்தர் சிலை பிரதிஷ்டை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலுள்ள அரச மரத்திற்கு முன்பாக புத்தர் சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இதனையொட்டி நாவற்குடாவிலிருந்து பொலிஸ் நிலையம் வரை ஊர்வலமொன்றும் நடைபெற்றது. பொலிஸ், இராணுவம் உட்பட பாதுகாப்பு தரப்பினரும்,பௌத்த பிக்குமார்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக