JKR. Blogger இயக்குவது.

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

இடைத்தங்கல் முகாம்களில் ஊடுறுவியுள்ள புலி உறுப்பினர்களை இனம் காண்பதில் சிக்கல் :


இடைத்தங்கல் முகாம்களில் ஊடுறுவியுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை இனம் காண்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதென பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.தற்கொலைப் போராளிகள், புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு மட்டத்திலான விடுதலைப் புலி உறுப்பினர்கள் முகாம் மக்களுடன் மக்களாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களினால் அப்பாவி மக்களுக்கு அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரியளவு முகாம்களில் பெருந்தொகை மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதனால் புலி உறுப்பினர்களை கண்டு பிடிப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதென சுட்டிக்காட்டப்படுகிறது.
சிறு சிறு முகாம்களாக காணப்பட்டால் புலி உறுப்பினர்களை கண்டு பிடிக்கக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பிரபாகரனின் பெற்றோர் கூட பொதுமக்களுடன் கலந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளமை கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
முகாம்களில் ஊடுறுவியுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களினால் மக்கள் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010