JKR. Blogger இயக்குவது.

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

புலிகளின் சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தர் கைது


தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்ள்ஸ் அன்ரனி படைப் பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கடந்த 19 ஆண்டு காலமாக அங்கம் வகித்து வந்த சிரேஸ்ட தலைவர் ஒருவரே இவ்வாறு கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விடுதலைப் புலி உறுப்பினர் வெளிநாடு செல்வதற்காக கல்கிஸ்ஸ விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஏழு முக்கிய தாக்குதல்களை இவர் வழிநடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபரின் உடலில் பல இடங்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010