ஜனாதிபதித் தேர்தல் : நேற்றுமாலை வரை 730 வன்முறைகள்

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை மாலை வரை 730 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் வன்முறைகளில் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் 33பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் 16 தீவைப்பு சம்பவங்களுடன் 5 கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாகvum அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதிக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்ற மாவட்டமாக குருணாகலில் 71 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பொலன்னறுவையில் 63 வன்முறைச் சம்பவங்களும், மாத்தறையில் 56 வன்முறைச் சம்பவங்களும் அதிகபட்சமாக இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக