JKR. Blogger இயக்குவது.

செவ்வாய், 5 ஜனவரி, 2010

உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து சரத் வெளியேற்றம்


உயர்நீதிமன்ற உத்தரவின்படி எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்து நேற்று முன்தினம் வெளியேறினார்.

எனினும் அது தொடர்பில் அவர் சட்டமா அதிபருக்கு அறிவிக்கவில்லை என இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அவர் உத்தியோகபூர்வமாகத் தமது வாசஸ்தலத்தில் இருந்து வெளியேறியமைக்கான அறிவித்தலை குறித்த தரப்புகளுக்கு அறிவித்த பின்னரே அது தொடர்பாக ஆதனங்கள் மதிப்பீடு செய்யப்படும் என இராணுவ தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, இந்த வாசஸ்தலத்தில் இருந்து ஜெனரல் பொன்சேகா வெளியேறியுள்ள நிலையில் அதில் தற்போதைய இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரிய குடியேறவுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010