தமிழகத்தில் புலி ஆதரவாளர்களுக்குக் குடியுரிமை : சுப்பிரமணிய சுவாமி கடும் எதிர்ப்பு
புலிகளின் ஆதரவாளர்களுக்குத் தமிழ் நாட்டில் குடியுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமானால் அதற்கு தான் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதாக இந்திய ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.புலிப் பயங்கரவாதிகள் இலங்கையில் முழுமையாக அழிக்கப்பட்ட பின்னர் அவர்கள் உலகின் பலபாகங்களிலும் ஒன்றிணைந்து மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட முயன்று வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் சட்டவிரோதமான முறையில் இவர்களுக்கு குடியுரிமை வழங்க முன்வந்தால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக