JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

போலி ஆயிரம் ரூபாய் நாணயகத் தாள்களை அச்சிட்ட மாணவர்கள் உள்ளிட்ட நால்வர் கைது!


போலி ஆயிரம் ரூபாய் நாணயகத் தாள்களை அச்சிட்ட நால்வரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அண்மையில் யுத்த வெற்றியை நினைவுகூரும் வகையில் வெளியிடப்பட்ட ஜனாதிபதியின் படத்துடன் கூடிய ஆயிரம் ரூபா நாணயத்தாள்களே இவ்வாறு போலியாக அச்சிடப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களில் மூவர் பாடசாலை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட மாணவர்களில் இருவர் கணனி டிப்ளோமாவை பூர்த்தி செய்தவர்கள் எனவும், மற்றயைவர் தற்போது கணனி பயிற்சி நெறியொன்றை பயின்று வருபவரென்றும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேகநபர்களுடன் 212போலி ஆயிரம்ரூபாய் நோட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளன. கொழும்பு, ரத்மலானை, அவிசாவளை, மற்றும் மகரகம ஆகிய பகுதிகளில் வைத்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை போலி நாணயத் தாள்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென பொலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010