JKR. Blogger இயக்குவது.

வியாழன், 28 ஜனவரி, 2010

ஜெனரல் சரத்துக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பாதுகாப்பும் நீக்கம் : உதய


ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு வழங்கப்பட்டிருந்த வாகனங்களை மீளளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்துள்ளதையடுத்து எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாதுகாப்புக் குறித்து நாம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நேற்று புதன்கிழமை மாலை முதல் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு அகற்றப்பட்டது. இராணுவத்திலிருந்து விலகிச் சென்று அவருடன் இருந்த ஒன்பது இராணுவ வீரர்கள் தற்போது இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டிருந்த கவச வாகனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்களை மீளளிக்குமாறு கேட்டபோதும் இன்று நண்பகல் வரை அவை கையளிக்கப்படவில்லை என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010