JKR. Blogger இயக்குவது.

சனி, 30 ஜனவரி, 2010

'லங்கா" செய்தித்தாள் காரியாலயம் சீல் வைப்பு


ஜேவிபியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான 'லங்கா" செய்தித்தாளின் நுகேகொட பிரதேசத்தில் உள்ள காரியாலயம் இன்று குற்றவியல் தடுப்பு பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த சீல் வைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ஐ எம் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் இந்த காரியாலயம் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இது தொடர்பான வழக்கு விசாரணைகளின் பொருட்டு எதிர்வரும் புதன்கிழமை கங்கொடவில நீதிமன்றுக்கு வருகை தருமாறு தமக்கு இரகசிய பொலிஸார் பணித்துள்ளதாக அந்த பத்திரிகையின் ஆசிரியர் பிரியந்த லியனகே தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010