JKR. Blogger இயக்குவது.

வியாழன், 28 ஜனவரி, 2010

விரைவில் இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்படும் : அரசாங்கம்


விரைவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அமைச்சர் மைத்திரபால சிறிசேன தகவல் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்து பொதுத்தேர்தல் ஒன்றை நடத்தும் நோக்கில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அது கலைக்கப்படவுள்ள திகதி குறித்த எவ்வித தகவல்களையும் அவர் வெளியிடவில்லை.

இலங்கையின் நாடாளுமன்ற ஆட்சி காலம், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலின் வெற்றிப் பெருமிதத்துடன், பொதுத் தேர்தலையும் அறிவித்து, வெற்றி காணலாம் என ஜனாதிபதி கருதுவதாக கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010