JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை வழங்குவதில் மெத்தனப் போக்கே தொடர்கிறது


அமெரிக்காவில் வெளிவரும் வோல் ஸ்றீட் ஜேர்னலில் தெரிவிப்பு

தமிழர்களுக்கான அரசியல் உடன்படிக்கைகளில் முக்கியமாக ஜனநாயக தமிழர் தலைவர்கள் பல வருடங்களாக சட்ட ரீதியாக கோரும் உரிமைகளை வழங்குவ தில் மெத்தனப் போக்கே தொடர்கிறது. அதிகாரத்தை அனைத்து மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிப்பதே இதற்கு தீர்வாக அமையும் என அமெரிக்காவில் வெளியாகும் வோல் ஸ்ட்றீட் ஜேர்னல் பத்திரிகையில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்ப் புலிகள் மீது ராணுவத்தை வைத்து குண்டு மழை பொழிந்த போது "ராஜபக்ஷவிற்கு இது மிகப் பெரிய சவால்" என வருணிக்கப்பட்டது. மே 2009இல் புலிகளை அழித்து குண்டு மழை முற்றிலும் ஓய்ந்து நாட்டில் அமைதி நிலவிய போது ராஜபக்ஷ அந்தச் சவாலில் வெற்றி பெற்றார். இப்போது போர் வெற்றியோடு தேர்தல் வெற்றியும் சேர்ந்து ஸ்ரீலங்காவை எப்படியான ஒரு நாடாக ஆக்க வேண்டும் என்ற பொறுப்பை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ராஜபக்ஷ இருக்கின்றார்.

கடந்த செவ்வாயன்று நடந்த தேர்தலில் 58 சதவீத வாக்குகளை பெற்று மிகப் பெரிய வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட புலிகளைப் போரில் வென்ற முன்னாள் இராணுவ தளபதியை தோற்கடித்தாலும் தேர்தல் இதற்கு முன் போல் இல்லாமல் அமைதியாகவே நடைபெற்றது.

கடும் குறைபாடுகளுக்கு மத்தியிலும் தேர்தல் சில நன்மைகளை கொண்டு வந்துள்ளது. மிக முக்கியமாக இரண்டு சிங்கள தலைவர்களும் தமிழர் வாக்கு ளுக்காக போட்டியிடும் சூழ்நிலை உருவானது. முன்னதாக பொன்சேகா மிகப் பெரிய தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் கூட்டணி ஏற்படுத்தினார். இதுதானாக தமிழர் வாக்குகளை சேகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ராஜபக்ஷவை தள்ளியது.

இதன் விளைவாக அரசு தமிழ் அகதி முகாம்களில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. தேர்தல் அரசியல் சிங்கள இனவெறிக்கு எதிராக அமைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராஜபக்ஷவின் முதல் முடிவு தொடர்ந்தும் இதே பாதையில் பயணிப்பதா இல்லையா என்பது தான். பயணிப்பார் என்பதையே அறி குறிகள் காட்டுவதாக உள்ளன.

கடந்த சில மாதங்களாக விடுதலைப் புலிகள் வசம் இருந்த வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் போரின் போது அடித்து நொறுக்கப்பட்ட மற்றும் சிதிலமடைந்த கட்ட மைப்புகளை மீண்டும் புனரமைப்பதில் கொழும்பு பணத்தை வாரி இறைத்தது.

அதிபரும் இந்த புனரமைப்புக்கள் தொடரும் என தேர்தலின் போது வாக்குறுதி அளித்ததோடு நேர்மையாக நடப்பதாகவே காட்டிக் கொண்டுள்ளார். இருப்பினும் தமிழர்களுக்கான அரசியல் உடன்படிக்கைகளில் முக்கியமாக ஜனநாயக தமிழர் தலைவர்கள் பல வருடங்களாக சட்டரீதியாக கோரும் உரிமைகளில் மெத்தனமே தொடர்கிறது.

அதிகாரத்தை அனைத்து மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிப்பதே இதற்கு தீர்வாக அமையும். ஆனால் அரசின் கவனம் ஆட்சியை கொழும்பில் இருந்து மாற்றுவதிலும் அதற்கான அரசியல் சட்டத்தை மாற்றியமைப்பதிலும் உள்ளது.

இதற்கு மாற்றாக தேர்தல் பிரச்சாரங்களின் போது பொருளாதார வளர்ச்சி சுட்டிக்காட்டப்பட்டது. இந்த சமாதானங்கள் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது ஏப்ரலில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் தெரியும்.

பலதரப்பட்ட முறைகளை அமுல்படுத்தி பார்த்த பின்னரே எந்த முறை சரியாக வரும் என்பதை பல வருடங்களுக்கு பின் முடிவு செய்ய முடியும். ராஜபக்ஷவின் இரண்டாவது முக்கிய பொறுப்பு இலங்கைக்கான அரசியல் திட்டத்தை வரையறுப்பது. சுதந்திரமான பத்திரிகைகள் மற்றும் ஆரோக்கியமான எதிர்கட்சிகள் கொண்ட முறையான ஜனநாயகத்தை ஏற்படுத்துவது.

பத்திரிகை சுதந்திரம் இலங்கையில் எப்போதும் மோசமாகவே உள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளித்த பல பத்திரிகை நிருபர்களும் ஆசிரியர்களும் படுகொலை செய்யப்பட்டதே இதற்கு சான்று.

தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளித்த வலைத் தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. பரந்த மனப் பான்மையுடன் விவாதிப்பதே வேறுபாடுகளை அமைதியான முறையில் களைய வழிவகுக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010