JKR. Blogger இயக்குவது.

செவ்வாய், 12 ஜனவரி, 2010

லசந்த கொலை; எவரும் கைதாகவில்லை : கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்


ராஜகிரியவில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டு சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பில் இதுவரை குற்றவாளிகள் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

இதனைக் கண்டித்துத் தற்பொழுது கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறுகிறது.

நூற்றுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக அங்கிருந்து, எமது இணையத்தளச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010