JKR. Blogger இயக்குவது.

திங்கள், 11 ஜனவரி, 2010

நல்லூர் தேவஸ்தானத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயம்.

யாழ்.குடா நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சகிதம் வரலாற்றுப்பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

யாழ்.குடாநாட்டு மக்களின் பாரம்பரிய முறைக்கு ஏற்ப மேளதாள வாத்தியங்களுடன் மலர்மாலை அணிவித்து பூரண கும்ப மரியாதையுடன் ஜனாதிபதிக்கு அங்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. அச்சமயம் வீதியின் இருமருங்கிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் வீடுகள் தோறும் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு மலர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பொதுமக்கள் கௌரவித்தனர். நல்லூர் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் பங்குகொண்ட ஜனாதிபதி அவர்கள் ஆலயச்சுற்றாடலில் தம்மைக்காண்பதற்காக திரண்டு நின்றிருந்த பெருமளவிலான பொதுமக்களையும் சந்தித்து அளவளாவியமை விசேட அம்சமாகும்.























0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010