JKR. Blogger இயக்குவது.

வியாழன், 4 பிப்ரவரி, 2010

சுதந்திர தினத்தை முன்னிட்டு 1,753 கைதிகள் விடுதலை


இலங்கையின் 62 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 1,753 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஒன்று முதல் மூன்று வருட காலம் வரையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நபர்களுக்கு இரண்டு வார கால தண்டனைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தண்டம் மற்றும் அபாரதப் பணத்தை செலுத்த முடியாதவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

குறிப்பாக போகம்பரை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகளே அதிக எண்ணிக்கையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010