JKR. Blogger இயக்குவது.

வியாழன், 4 பிப்ரவரி, 2010

யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு


யாழ்ப்பாணம், கொழும்புத் துறை நெடுங்குளம் வீதியில் உள்ள கிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நெடுங்குளம் வீதியைச் சேர்ந்த எஸ்.சிவராசா வயது 30 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.

சடலத்தின் உடலிலும் தலையிலும் பலத்த அடி காயங்கள் காணப்படுகின்றன. கொலை செய்யப்பட்டுப் பின்னர் கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண பொலிஸார் சடலத்தை எடுத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010