JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

தேர்தல் காலத்தில் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது


கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலின் போது சில பொலிஸ் அதிகாரிகள் கடமையாற்றிய விதம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விரிவான விசாரணைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சில பொலிஸ் அதிகாரிகள் நேரடியாக அரசியல் நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ள இடமாற்றங்களின் போது அரசியலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்கக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது. சில பொலிஸ் அதிகாரிகள் அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு புறம்பான வகையில் செயற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. புலனாய்வுப் பிரிவு மற்றும் அமைச்சுப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010