JKR. Blogger இயக்குவது.

சனி, 6 பிப்ரவரி, 2010

வவுனியா முகாம்களில் 18 நடமாடும் முகாம்கள் : ஜப்பான் திட்டம்


இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கியுள்ள சிறுவர்களுக்கென 18 நடமாடும் நூலகங்களை வழங்கிச் செயற்படுத்த ஜப்பான் தீர்மானித்துள்ளது.

முகாம்களிலுள்ள சிறுவர்களின் கல்வி வளர்ச்சியினை நோக்காகக் கொண்டே இச்செயற்திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதரகம் அறிவித்துள்ளது.

முதற்கட்ட புத்தகங்களை வழங்கும் நிகழ்வு நாளை மறுதினம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மனிக்பாம் முகாம் சிறுவர்களுக்கான நூல்களை வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010