JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

ரிஎம்விபி பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிடும் சாத்தியம்..!


எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனித்து போட்டியிடும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டக்களப்பில் உள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற அரசியல் பிரதிநிதிகளின் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட பெரும்பான்மையானவர்கள் கட்சியின் சுயாதீனத் தன்மையை முன்னிலைப்படுத்தி தனித்து போட்டியிடுவதே சாலச்சிறந்தது என கருத்து தெரிவித்ததாக கட்சியின் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார் எனினும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அரசாங்கத்தின் முக்கிய தோழமை கட்சியாக உள்ள நிலையில் அதன் சாத்தியப்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது எனவே எதிர்வரும் 10ம் திகதி இடம்பெறவுள்ள அரசாங்கத்தின் உயர்மட்டங்களுடனான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் சந்திப்பின்போது இதுதொடர்பில் கட்சியின் தலைவர் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விளக்கமளித்து அதன்பின்னர் இறுதிதீர்மானம் மேற்கொள்வார் என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இந்த முறை பொதுத்தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் தனித்து போட்டியிடும் நோக்கையே கட்சி கொண்டிருப்பதாக உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன இதற்கிடையில் இந்த தேர்தலை தமிழ் மக்களுக்காக அரசியல் தீர்வுக்காகவும் அபிவிருத்திக்குமான நோக்காக கொண்டே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பார்ப்பதாகவும் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010