JKR. Blogger இயக்குவது.

திங்கள், 8 பிப்ரவரி, 2010

ஷேவாக்கின் அதிரடி துடுப்பாட்டத்தினால் வலுவான நிலைக்குச் செல்லும் இந்தியா


தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 558 பெற்று தனது துடுப்பாட்டத்தை நிறுத்திக் கொண்டது. ஹசிம்அம்லா 253 ஓட்டங்களையும் காலிஸ் 173 ஓட்டங்களையும் எடுத்தனர். சகீர்கான் 3 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ஓட்டங்களை எடுத்து இருந்தது. காம்பீர் 12 ஓட்டங்களுடனும் ஷேவாக் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று (திங்கட்கிழமை) 3-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடினார்கள்.

தென் ஆபிரிக்க வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் இந்திய அணி திணறியது. 56 ஓட்டங்கள் பெறுவதற்க்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது தொடக்க வீரர் கம்பீர் 12 ஓட்டங்களுடன் மார்கல் பந்து வீச்சில் பெவிலியன் ஆட்டமிழந்தார்.

அடுத்து களம் வந்த தமிழக வீரர் முரளி விஜய் 4 ஓட்டங்கள் ஆட்டம் இழந்தார். வங்காளதேச தொடரில் முத்திரை பதித்த டெண்டுல்கர் இன்று பிரகாசிக்க வில்லை. அவர் 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்து மிகுந்த ஏமாற்றத்தை அளித்தார். விஜய் டெண்டுல்கர் ஆகியோரது ஆட்டமிழப்பைத் தெடர்ந்து ஜோடி சேர்ந்த பத்ரி நாத் செவாக் நிதானமாக நின்று விளையாடி வருகின்றனர். என்பதுடன் ஷேவாக் சதம் ஒன்றையும் பூர்த்தி செய்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010