JKR. Blogger இயக்குவது.

புதன், 3 பிப்ரவரி, 2010

லசந்த படுகொலை : சந்தேக நபர் தொடர்ந்து விளக்கமறியலில்


'சன்டே லீடர்' பிரதம ஆசிரியரின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி நடத்துனரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை பிரதான நீதிமன்ற நீதவான் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

லசந்த விக்ரமதுங்க கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி பத்தரமுல்லையில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார்.

கல்கிசை பிரதம நீதவான் ஹர்ஷ சேதுங்கவின் முன்னிலையில் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் இவ்வுத்தரவினைப் பிறப்பித்தார்.

லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் அப்பகுதியில் இடம்பெற்ற தொலைத்தொடர்பாடல் விபரங்களைத் தாம் பெற்றுள்ளதாகவும் அந்த இலக்கங்களுக்குரிய நபர்களை விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றிடம் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010