JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

பிரபாகரன் பதுங்கியிருந்த ரகசிய இடம் கண்டு பிடிப்பு ஏராளமான ஆயுதங்கள் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.


புலித் தலைவர் பிரபாகரன் பதுங்கியிருந்த ரகசிய இடத்தை இலங்கை பாதுகாப்பு படையினர் கண்டு பிடித்தது அங்கிருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என கருதப்படும் ஆறு பேர் தடுப்பு முகாம்களில் இருந்து சமீபத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் வன்னி பகுதியில் இலங்கையின் பாதுகாப்பு விசேட பிரிவினர் தீவிர சோதனை நடத்தினர். இதில் பிரபாகரன் பதுங்கியிருந்த ரகசிய இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது மண்ணுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் சீடிக்கள் மற்றும் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்கள் அனைத்தும் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடையவை எனவும் தற்போது நடந்து வரும் விசாரணைக்கு இது பெரிதும் பயன்படும் என பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை படையினர் அணியும் உடைகள் கண்ணி வெடிகள் 300கிலோ வெடி மருந்துகள் கைக்குண்டுகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன. கடைசி கட்ட மோதல்களின்போது பிரபாகரன் அவ்விடத்தில்தான் பதுங்கியிருந்ததாக விசாரணக்குட்படுத்தப்பட்டுள்ள பிரபாகரனுக்கு நெருக்கமான புலி உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010