JKR. Blogger இயக்குவது.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

மைக்கல் ஜெக்ஸனின் மரணம் : டாக்டர் முர்ரே எந்நேரமும் கைதாகலாம்


பொப் இசை மன்னன் மைக்கல் ஜெக்ஸனின் டாக்டர் கோன்ராட் முர்ரே எந்த நேரமும் கைதாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மைக்கல் ஜெக்ஸன் கடந்த ஆண்டு திடீரென மரணமடைந்தார். அவரது இறப்புக்கு அதிகளவில் தூக்கத்தை ஏற்படுத்தும் மாத்திரைகள் தான் காரணம் எனக் கூறப்பட்டது.

டாக்டர் முர்ரே பரிந்துரைத்த மருந்தைச் சாப்பிட்டுத்தான் அவருக்கு மரணம் நேர்ந்ததாகவும் கூறப்பட்டது.

கொலை செய்யும் எண்ணத்தில் மருந்தைக் கொடுக்கவில்லை என்று முர்ரே தெரிவித்திருந்தார். இருப்பினும் பொலிஸில் சரணடைவதற்கு டாக்டர் முர்ரே ஏற்பாடு செய்து வருவதாகவும், அதற்காக வக்கீல்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010