JKR. Blogger இயக்குவது.

சனி, 6 பிப்ரவரி, 2010

வெளிநாட்டு பிரஜைகள் அரசியல் ஆய்வுகளுக்காக இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்படும்


வெளிநாட்டு பிரஜைகள் அரசியல் ஆய்வுகளுக்காக இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்படும் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியல் விசாரணை மற்றும் ஆய்வு என்ற பெயரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நபர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதாக பாதுகாப்பு அமைச்சிற்கு கிடைக்கப் பெற்ற தகவல்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைநகர் கொழும்பின் நட்சத்திர விடுதிகளில் தங்கியிருந்து அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சில வெளிநாட்டு சக்திகள் முனைப்பு காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நபர்கள் தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் தகவல்களை திரட்டியுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010